'பாரத் டெக்ஸ் 2026' செயலியை வெளியிட்டது மத்திய அரசு
புதுடில்லி : ஜவுளி துறையை சேர்ந்த சர்வதேச மற்றும் உள்நாட்டு வர்த்தகர்கள் பயனடையும் வகையில் டில்லியில் சர்வதேச ஜவுளி கண்காட்சி, ஜூலை 14 - 17 வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்போர் பயனடையும் வகையில் 'பாரத் டெக்ஸ் 2026' என்ற செயலியை மத்திய ஜவுளி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து அமைச்சக செயலர் நீலம் ஷமி ராவ் கூறுகையில், “டில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ள சர்வதேச ஜவுளி கண்காட்சியை ஏற்றுமதியாளர்கள், தொழில்துறையினருடன் இணைந்து மத்திய ஜவுளி அமைச்சகம் நடத்த உள்ளது.
''இதில் 7,000 சர்வதேச வர்த்தகர்கள், 1.30 லட்சம் உள்நாட்டு வர்த்தகர்கள் பார்வையிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய தகவல்களை டிஜிட்டல் வடிவில் பாரத் டெக்ஸ் 2026 என்ற செயலியில் அறியலாம்” என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement