சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா உறுதி
புதுடில்லி: இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் ஒவ்வொருவரையும் கண்டறிந்து, வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த பிஎஸ்எப் நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:
செயற்கையாக மக்கள்தொகை எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சட்டவிரோதமாக அகதிகள் ஊடுருவது நடக்கிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஒவ்வொருவரையும் கண்டறிந்து வெளியேற்றுவோம்.
இந்தியாவின் சர்வதேச எல்லையில் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படும்.
அடுத்தாண்டுக்குள், ஸ்மார்ட் எல்லை திட்டத்தின் கீழ், பிஎஸ்எப் அமைப்புக்கு டிரோன், ரேடார்கள் மற்றும் திறன்வாய்ந்த கேமராக்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் அளிக்கப்படும்
சட்டவிரோத ஊடுருவல் மற்றும் கால்நடைகள் கடத்தலை தடுக்க போலீசார், மாவட்ட கலெக்டர்கள் உடன் இணைந்து பிஎஸ்எப் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.
ஒரு பிரச்னையை கட்டுப்படுத்துவது என்பது மட்டும் பாதுகாப்பு கிடையாது. அதை வேரோடு அழிப்பதே உண்மையானஅணுகுமுறை. ஊடுருவலை தடுக்க பிஎஸ்எப் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்
பாகிஸ்தான்.... பங்களாதேஷ்.... ஊடுருவல் ஆட்களை நமது நாட்டிலிருந்து விரட்டி அடிக்க வேண்டும்.... அவர்கள் இங்கே இருந்து கொண்டு நமது நாட்டின் உப்பை தின்று விட்டு.... எதிரி நாட்டுக்கு விசுவாசமாக இருக்கும் மோசமான ஆட்கள் .மேலும்
-
மாடு மேய்த்த போது விபரீதம் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
-
பாலியல் புகாரில் சிக்கிய டாக்டர் துாக்கிட்டு தற்கொலை
-
அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை சிறப்பு முகாம் நிறைவு
-
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தை முனையமாக உருவாக்க கோரிக்கை
-
ஸ்ரீபெரும்புதுார் கோட்டத்தில் வரும் 26ல் குறைதீர் கூட்டம்
-
மண் திட்டுகளால் துார்ந்த நகரீஸ்வரர் கோவில் குளம்