மின் வாரிய ஊழியர் எனக்கூறி வீடு புகுந்து சிறுமியிடம் அத்துமீறல்
அம்பத்துார்: மின் வாரிய ஊழியர் என கூறி, வீடு புகுந்து 9 வயது சிறுமியிடம் அத்துமீறிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அம்பத்துார் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளி விடுமுறை காரணமாக சிறுமியும், அவரது 13 வயது சகோதரரும், நேற்று முன்தினம் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது மின் வாரியத்தில் இருந்து வருவதாக கூறி, வீட்டிற்குள் ஒருவர் நுழைந்துள்ளார்.
பின், வீட்டின் மின்சார மீட்டரை காட்டுமாறு கூறி, சிறுமியை முதல் மாடிக்கு அழைத்து சென்று, பாலியல் ரீதியாக அத்துமீறியதுடன், சிறுமி அணிந்திருந்த கொலுசை பறித்து தப்பினார்.
இது குறித்து, சிறுமியின் பெற்றோர் அம்பத்துார் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்படி, திருட்டு, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
2 நாட்களில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு; வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; அமைச்சர் ஆனந்த் கண்டிப்பான உத்தரவு
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு