காங்கிரஸ் இருக்கும் இடத்தில் மதச்சார்பின்மை காக்கப்படுமா?: வைகோ சந்தேகம்
சென்னை: ''காங்கிரஸ் இருக்கும் இடத்தில் மதச்சார்பின்மை பாதுகாக்கப்படும் என்று சொல்ல முடியாது,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறினார்.
அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், மும்மொழிக் கொள்கையை எக்காரணம் கொண்டும், த.வெ.க., அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது. லோக்பவன் நிகழ்ச்சியில், 'வந்தே மாதரம்' பாடலை, கவர்னர் திணிக்கிறார். தமிழக அரசு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில், வந்தே மாதரத்திற்கு இடம் கொடுக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், பின், தேசிய கீதமும் பாடப்பட வேண்டும்.
த.வெ.க., ஆட்சிக்கு ஆறு மாதம் அவகாசம் கொடுப்போம். அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள்; போகப்போக படிப்பினைகளை கற்றுக் கொள்வர். கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் பிரிந்து சென்றதால், தி.மு.க.,வுக்கு எந்த பின்னடைவும் கிடையாது. காங்கிரஸ் இருக்கும் இடத்தில்தான் மதச்சார்பின்மை பாதுகாக்கப்படும் என சொல்ல முடியாது.
'இன்ஸ்டாகிராம்' வாயிலாக த.வெ.க., ஆட்சியை பிடித்து விட்டதாக, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறுவது, அவர் மனதில் இருந்து சொல்லும் கருத்து. அந்த கருத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் த.வெ.க பக்கம் போனதால் இந்த வைகோவுக்கு இப்போது திடீரென சந்தேகம் வந்துவிட்டது
மதச்சார்பின்மை மதவாதம் சமூக நீதி ஒன்றிணைவோம் வா
எல்லாம் புளித்து போன வசனங்கள். புதுசா ஏதாச்சும் சொல்லுங்க
இன்னுமா பேசிக்கிட்டு இருக்கு ????
கண்டிப்பா, சபையில் பைபிள் பிரச்சாரம் செய்யப்படும், மதசார்பில்லா முஸ்லீம் லீக்குடன் சேர்ந்து சனாதானத்தை எதிர்ப்போம்.
இம்முறை - வந்தேமாதரம் தமிழில் பாடப்பட்டது சார்
தேவாரம் திருவாசகம் நாலாயிர பிரபந்தம் போன்ற பாடல்களுக்கு பாமரரும் புரிந்து கொள்ளும் விதத்தில் உரை ஆற்றி நீங்கா புகழ் பெருங்களேன் ..இன்னொரு கண்ணதாசனாக மறைந்த பின்னும் மக்களின் மனதில் வாழலாம் ...
அதில் என்ன சந்தேகம்.... அவர்கள் தானே மதசார்பின்மை (அதாவது இந்துக்களுக்கு எதிரான) மொத்தமாக குத்தகைக்கு எடுத்து இருக்கிறார்கள்.
வந்தே மாதரம் என்றால் என்ன தாய் மண்ணே வணக்கம் இது சொல்வது தவறா. இது என்ன மோடி இயற்றிய பாடலா வங்கதேச கவிஞர் இயற்றிய பாடல் தேசபக்தி பாடல் அதில் நம்பிக்கை இல்லையா உஙகளுக்கு. புளித்துப்போன மதச்சார்பின்மையை வைத்துக்கொண்டு இனிமேலும் அரசியல் செய்ய முடியாது.
ஹிந்துக்களின் உரிமை இவர்களுக்கு மதவாதம். மற்றவர்களின் அராஜகம் இவர்களுக்கு மதசார்பு இன்மை. கான்-cross என்றாலே மதம் பிடித்தது என்பது 75 வருட இந்திய வரலாறு.
என்னங்க நாயுடுகாரு, அது என்னங்க மதச்சார்பின்மை? ஓட்டுக்காக ஒரு சமூகத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதும், ஒரு சமூகத்தை திறமை இருந்தும் அதல பாதாளத்தில் தள்ளி ஒதுக்குவதும் தான் உங்கள் மதச்சார்பின்மையா? எம் எஸ் சாமிநாதன், வ வே சு அய்யர், பாரதியார், வாஞ்சிநாதன், கணித மேதை ராமானுஜம், சுந்தர் பிச்சை, ஆர் வெங்கட்ராமன், இன்ன பிற அகிலம் புகழும் தமிழர்களை தமிழகத்தில் மட்டும் அவர்கள் ஒரு சமூகத்தை செத்தவர்கள் என்பதனால் ஒதுக்குவது தான் மதச்சார்பின்மையா? அதிக மதிப்பெண்கள் இருந்தும் ஒரு சமூக மாணவர்களுக்கு கல்லூரிகளில் அனுமதி மறுப்பது தான் மதச்சார்பின்மையா? தேர்தல் சமயத்தில் உங்கள் கூட்டணி சார்ந்த அந்த சமூக நபர் ஒருவருக்கும் டிக்கட் கொடுக்காமலிருப்பது தான் உங்கள் மதச்சார்பின்மையா? புதுமையா உங்கள் ஓட்டை ஒடிசல் காலம் கடந்த கொள்கைகள். மதம் பிடித்த காலமெல்லாம் கடந்துபோய்விட்டது. எல்லா மதக்குடும்பங்களிலும் எல்லா மதம் சார்ந்தவர்கள் இருக்கும் காலமிது. இனி கிழிந்துபோன மதச்சார்பின்மை, சமூக நீதி சமத்துவம் போன்ற கொடிகள் இறக்கப்படவேண்டும், திறமைக்கொடி தான் உயரக்கப்பறக்கவேண்டும், அது தான் நாட்டையும் தேசத்தையும் உயர்த்தும், பெருமைப்பட வைக்கும். நீங்கள் சனாதனக்கட்சி என்று பெயர் சூட்டும் உலகம் போற்றும் பா ஐ க பிரதமர் திரு மோடி அவர்கள் எப்படி திறமைக்கு மதிப்பு கொடுக்கிறார் என்று பாருங்கள். இனி உங்களுக்கு தேவை ஒய்வு மட்டுமே.மேலும்
-
கடலாடியில் இரவு நேர டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் புதிய கட்டடம்
-
ஐ.டி.ஐ.,வளாகத்தேர்வு
-
விலை கிடைப்பதால் திராட்சை வாழை சாகுபடி பரப்பு அதிகரிப்பு
-
சூரிய, காற்றாலை மின் உற்பத்தி திறன் அதிகரிப்பு; மோடி தலைமைக்கு கமல் பாராட்டு
-
பெண்களை இழிவுபடுத்தி திமுக எம்பி ஆ.ராஜா சர்ச்சை பதிவு; குவியும் கண்டனங்கள்
-
60 நாட்களில் மிகப்பெரிய நிர்வாக மாற்றம்; சொல்கிறார் அமைச்சர் ஆதவ்