தேங்காய் பருப்பு விலை உயர்வு

ப.வேலுார்:ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வந்தனர். அதேபோல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளி மாவட்ட வியாபாரிகளும் வாங்கி சென்றனர்.

கடந்த வாரம் நடந்த சந்தையில் ஏலத்திற்கு, 10 ஆயிரத்துக்கு 540 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, 150.60 ரூபாய், குறைந்தபட்சமாக, 132.70, சராசரியாக, 146.30 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 8 லட்சத்து, 67 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த தேசிய வேளாண்மை சந்தையில், 11 ஆயிரத்துக்கு, 596 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 151.60 ரூபாய், குறைந்தபட்சமாக, 133.99 ரூபாய், சராசரியாக, 147.80 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 12 லட்சத்து, 53 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.

Advertisement