மாணவி கர்ப்பம்; 2 பேர் கைது

சேலம்; சேலம், சின்னதிருப்பதியை சேர்ந்த, 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். சற்று மனநலம் பாதிக்கப்-பட்டிருந்தார்.
இவரது உடலில் சில நாட்களாக மாற்றம் ஏற்பட்-டது. இதனால் அவரது தாய், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்ததில், சிறுமி, 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்த-போதும், அவர் தெரியாது என கூறினார்.

பின் சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அம்மாபேட்டை மகளிர் போலீசார் விசாரித்ததில், சின்னதிருப்பதியை சேர்ந்த, இப்ராஹிம், 21, சிக்கந்தர், 48, ஆகியோர், பள்ளிக்கு சென்ற சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்-தனர்.

Advertisement