அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தவர்கள் மீது நடவடிக்கை பாயுமா?



பள்ளிப்பாளையம்:: தமிழக சட்டசபை தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்.,க்கு எதிராக, முன்னாள் அமைச்சர்கள் சிலர் போர்க்கொடி துாக்கினர். இவர்கள் அனைவரும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். இதில், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, நாமக்கல் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம், பாஸ்கர் தலைமையில் நாமக்கல்லில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட இரண்டு நகர செயலாளர்கள், இரண்டு ஒன்றிய செயலாளர்கள், ஒரு டவுன் பஞ்., செயலாளர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை, இவர்கள் அனைவரும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிர்வாகிகள் பட்டியல், கட்சி தலைமைக்கு அனுப்பப்படவுள்ளதால், சில நாட்களில் இவர்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Advertisement