ஈரான் போரை தொடரலாமா, வேண்டாமா?: டிரம்ப் - நெதன்யாகு காரசார விவாதம்
நியூயார்க்: மேற்காசிய நாடான ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை கையாள்வதில் அமெரிக்கா -- இஸ்ரேல் இடையே லேசான முரண்பாடுகள் எட்டிப் பார்ப்பதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மீது உடனடியாக கடுமையான ராணுவ தாக்குதலை தொடுத்து, அதன் அணு ஆயுதக் கனவை தகர்க்க வேண்டும் என்பதில் நெதன்யாகு உறுதியாக உள்ளார். ஆனால் டிரம்போ, துாதரக ரீதியிலான பேச்சுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்ற தொனியில் காய் நகர்த்தி வருகிறார்.
சமீபத்தில் கூட, வளைகுடா நாடுகளின் கோரிக்கையை ஏற்று, ஈரான் மீதான ஒரு திட்டமிடப்பட்ட ராணுவ தாக்குதலை டிரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இஸ்ரேலின் முன்னணி செய்தி நிறுவனமான, 'சேனல் 12' வெளியிட்டுள்ள தகவலின்படி, டிரம்பும், நெதன்யாகுவும் நேற்று முன்தினம் நள்ளிரவில் மிக நீண்ட மற்றும் காரசார உரையாடலை நிகழ்த்தியது தெரியவந்துள்ளது.
ஈரான் போரின் அடுத்தகட்ட நகர்வு குறித்து இரு தலைவர்களும் ஒரு மிக முக்கியமான, இறுதி முடிவை எடுக்கும் தருணத்தில் இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. டிரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகிய இருவருக்கும் இடையே கடந்த மூன்று நாட்களில் நடக்கும் இரண்டாவது பேச்சு இதுவாகும்.
முன்னதாக தன் சீன பயணம் மற்றும் அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங்குடனான சந்திப்பு குறித்து நெதன்யாகுவிடம் விரிவாக விவாதித்ததாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது மீண்டும் நள்ளிரவில் அவசர ஆலோசனை நடந்துள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பு முற்றிலும் அழித்து விட வேண்டும். பிறப்பில் குழந்தை மனிதனாக பிறக்கும். வளர்ப்பில் மிருக குணங்கள் போதிக்க படுவதால், செய்யும் குற்றம் மனதிற்கு நியாயமாக தெரியும். ஈரான் போரை தொடர இஸ்ரேல், அமெரிக்கா தடுமாறினால், திடீர் தாக்குதலை எதிர் கொள்ள வேண்டும். பேரழிவாக இருக்கும். ஈரான் தீவிரவாதிகள் குழுக்கள் முடிவு அறிய முடியாது. பாகிஸ்தான் போன்று ஆக்கிரமித்து உருவாக்கிய பூமி ஈரான். அங்கு எப்போதும் சட்ட விரோதம் இருக்கும்.மேலும்
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
-
நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
-
கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி