கோயில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் பொதுநல மனு:
திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு சொந்தமாக அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. இவற்றை நிர்வகிப்பது, பாதுகாப்பதில் முறைகேடு நடக்கிறது. நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில சொத்துக்களுக்கு முறையற்ற வகையில் தனிநபர்களுக்கு சாதகமாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. சொத்து தொடர்பான ஆவணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோயில் பகுதியில் அமைந்துள்ள சில கடைகள் மற்றும் கட்டுமானங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன.
ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்களை மீட்க வேண்டும். அங்கீகாரமற்ற கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோயில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை கோரி அறநிலையத்துறை செயலர், கமிஷனர், வருவாய்த்துறை கமிஷனர், கோயில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.பரதசக்கரவர்த்தி, ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. அரசு தரப்பு,'அறநிலையத்துறை உதவி கமிஷனர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும். அதன் அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இக்கோயிலின் சொத்துக்களை பாதுகாக்க அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
நீங்களும் உத்தரவு போட்டுக்கிட்டுதான் இருக்கீங்க. ஆனா எந்த அரசியல்வாதி , அரசு அதிகாரிகள் காதுல வாங்கறாங்க? ஹிந்துக்களின் கோவில் வருமானத்தில்தானே அவங்க பொழப்பே ஓடுது.
குவாரி டாஸ்மாக் பத்திரப்பதிவு அடுத்து அறநிலையத்துறை ஊழலில் 4வது இடத்தில் உள்ளது. பல கோவிலில் போலி ரசீது கொடிகட்டி பறக்கிறது. வாடகை வசூலில் கொள்ளை.
வடஇந்தியாவில் கோவில்கள் அறக்கட்டளைகள் மூலம் பராமரிக்கப்பபிடுகின்றன. வைஷ்ணவ தேவி ஷீரடி உஜ்ஜைன் அயோத்யா காசி போன்ற கோவில்கள் மிகவும் சிறப்பான முறையில் செயல்படுகின்றன. ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் கட்டுப்பாட்டில் கோவில்கள் இருக்க வேண்டும்
It is already too late!!
பழைய ஆட்சியில் யார் யார் எவ்வளவு வாங்கிக்கொண்டு குத்தகை விட்டார்களோ ? அவர்கள் அத்தனை சுலபமாக ஒப்படைத்துவிடுவார்களா? முதல்வருக்கு முதல் கோர்ட் உத்தரவு, பக்தி பூர்வமாக கோயிலில் ஆரம்பித்துள்ளது தலைவலியும் கூட அன்று ஸ்டாலின் புலம்பிய ‘தூக்கம் போச்சு’ பல்லவியை இப்போதே ஆரம்பிக்க வேண்டுமோ என்னவோ?
இந்துகளை , பிரபல மடாதிபதிகள் கொண்ட சொத்துகளை பாதுகாக்கும் குழு அமைத்து பாதுகாக்க வேண்டும்....கொள்ளை போக அனுமதிக்க கூடாது..
HR & CE will not take any action. Because they are getting commission from the parties. Even if next government comes the status remains the same. Poor Tamil Nadu Hindusமேலும்
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
-
நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
-
கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி