பாலியல் புகார் கொடுக்க வந்த பெண் அலைக்கழிப்பு; போலீசார் 5 பேர் சஸ்பெண்ட்

5

தேவகோட்டை: பாலியல் புகார் கொடுக்க வந்த பெண்ணை ஸ்டேஷன்கள் மாறி மாறி அலைகழித்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆட்டோ டிரைவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளிக்க போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த போலீசார் ஏதும் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழித்து இருக்கின்றனர்.

தற்போது பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், கீதாலட்சுமி உட்பட இரு பெண் சிறப்பு எஸ்.ஐ. , தனிப்பிரிவு ஏட்டு உட்பட ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த மே 18ம் தேதி புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement