கர்நாடக துணை முதல்வர் கருத்துக்கு முதல்வர் விஜய் ரியாக் ஷன் என்ன?
தஞ்சாவூர்: 'மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை' என, காங்., கட்சியை சேர்ந்த கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாரின் கருத்துக்கு, முதல்வர் விஜய் என்ன முடிவு எடுக்க போகிறார் என, டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
காவிரி நதி நீர் தமிழகத்தின் ஜீவாதாரம். டெல்டா உள்ளிட்ட பல மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி, 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி விளங்கி வருகிறது.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆட்சியாளர்களுக்கும் முறையான அணுகுமுறை இல்லாத சூழலில், கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டுமான பணி தொடங்க, மத்திய அரசிடம் அனுமதி வாங்கும் அளவுக்கு உறுதியாக உள்ளது.
இந்நிலையில், 'மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தமிழகத்திற்கு உரிமை இல்லை. தற்போது திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரித்துள்ளோம். விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம். மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின், உடனடியாக பூமி பூஜை நடக்கும்' என, கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது, டெல்டா உள்ளிட்ட தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்தாண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடக மாநில அரசிடம், ராகுல், சோனியா போன்றவர்கள் மூலம், மேகதாது அணை விவகாரத்திற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என, டெல்டா விவசாயிகள் முன்னாள் முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், ஆட்சி அதிகாரம் தான் முக்கியம் என, மவுனமாக இருந்து விட்டனர். இதன் விளைவாக கர்நாடகா, மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது, காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் சென்று, இரண்டு அமைச்சர்களையும் பெற்றுள்ளது. முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் நெருக்கம் காட்டும் சூழலில், மேகதாது விவகாரத்தில் விவசாயிகளுக்காக ராகுல் மூலம், கர்நாடக அரசிடம் பேசி தீர்வு காண்பாரா?
கடந்த ஆட்சியாளர்களிடம் விவசாயிகள் முறையிட்டு ஒய்ந்து போன நிலையில், முதல்வர் விஜய், அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என, டெல்டா விவசாயிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.
நடிகர்களுக்கு ரியாக்சன் செய்வது சாதாரணமானதுதான்
மௌனம் தான் . காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவை . விவாசியிகளின் கதி அம்போ
ஒரு ராஜ்யசபா சீட்டை கான் கிராஸ் கட்சிக்கு கொடுங்கள்.... அவர்கள் தான் உண்மையான விசுவாசிகள்.... (ஏற்கெனவே திமுக கட்சிக்கு அல்வா கொடுத்து ஒரு சீட் வாங்கியாச்சு...... இப்போது இங்கே ஒரு சீட் வாங்கி கொண்டு... அதிமுக கடையை மூடுவதற்கு முன்பு... அதிமுக கூட்டணிக்கு போய் விட வேண்டும்.... அங்கேயும் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டு வாங்கி விட வேண்டும்.... இது தான் கான் கிராஸ் கட்சி மைண்ட் வாய்ஸ் )
I think RAGA will show little empathy to TN farmers, to speak with Congress ruled Karnataka State CM for stopping the dam construction across the Cauvery river.
TN CM Mr.Vijay is too naive to influence RAGA on this.
அப்பாவியா இருக்கீங்க
பிரதமருக்கு ஒரு கடிதம், கர்நாடகா வுக்கு ஒரு தோழமை கடிதம், அடுத்த வாரம் டெல்லிக்கு போய் ராகுல் உடன் கொஞ்சசல் குலாவும்.
திமுக ஆட்சி = த வெ க ஆட்சி... இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை... இரண்டு பேரும் இந்துக்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்கள்.... காவிரி முதல் திருப்பரங்குன்றம் வரை.... இரண்டு பேரும் வாயே திறக்க மாட்டார்கள்.... ஆக மொத்தம் தமிழக மக்கள் தான் இளிச்சவாயர்கள் !!!
செத்த பாம்பு மாதிரி உட்கார்ந்திருந்தா போதும் மத்ததெல்லாம் மேலே இருக்கிறவன் பாத்துக்குவான் அவன் தானே ஆட்சியில் உட்காரவச்சான்.(அட நான் கடவுள சொன்னேங்க)
எதுக்குமே ரியாக்சன் குடுக்காம பிழைப்பு ஓட்டுவதாகவே திட்டம். சனாதன எதிர்ப்புக்கு கருத்து தெரிவித்தாரா என்ன?
வெயிட் ப்ரோ திமுக கிட்ட கேட்டு சொல்லுவார்
திராவிட கருத்து தான் ஜோசப் விஜயோடது.மேலும்
-
விளம்பர செய்தி... செயின்ட் ஆண்டனிஸ் பள்ளி சாதனை
-
ஞாயிறு: சோழர் பட்டறையில் துாரிகைகளின் திருவிழா கேன்வாசில் கவிதைபாடும் ஓவியங்கள்
-
அலுவலக விருப்பம்: பி.எஸ்., மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் 26ம் தேதி குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
-
துாய்மை இயக்கப் பணி கூடுதல் கலெக்டர் ஆய்வு
-
தி.மு.க., ஆய்வு குழு வருகை மாவட்ட செயலாளர் தகவல்
-
தகவல் சுரங்கம்