கோவில் நிதியில் முறைகேடு  உரிய நடவடிக்கை தேவை

1


@quote@ராமேஸ்வரம் கோவிலில் லட்டு பிரசாத வினியோகத்தில், அதிகாரிகள் பல கோடி ரூபாய் முறைகேடு செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. திருச்செந்துார் கோவில் தரிசன கட்டண ரசீது முறைகேட்டில், 25 லட்சம் ரூபாய் திருடிய பெண் அதிகாரி சிக்கியுள்ளார். இதேபோல, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் கோவில்களில் விசேஷ நாட்களில், சிறப்பு தரிசன கட்டணக்கொள்ளை குறித்த புகார்கள் வந்தும், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

உண்டியல் காணிக்கை முதல், பிரசாத வினியோகம், அன்னதான காணிக்கை வரை பல விதங்களில் நடக்கும் ஊழல்களின் பின்புலத்தில், பெரிய நெட்வொர்க் உள்ளது. இது குறித்து முழுமையாக விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள அறநிலைய துறை அமைச்சர் மற்றும் அதிகாரி, கடந்த ஐந்தாண்டுகளில் இத்துறையில் நடந்த ஊழல்கள் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும்.

- காடேஸ்வரா சுப்பிரமணியம்

தலைவர், ஹிந்து முன்னணிquote

Advertisement