ஜாதி பார்த்து முதல்வர் விஜய் வாய்ப்பளிக்கவில்லை; அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் பேட்டி

37


சென்னை: ஜாதி பார்த்து முதல்வர் விஜய் வாய்ப்பளிக்கவில்லை எனக்கூறி விமர்சனத்திற்கு அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் ரமேஷ் கூறியதாவது: நமது கட்சியின் கொள்கை என்பது மதசார்பற்ற, சமூக நீதி அதுதான் எங்களது கொள்கையாக தலைவர் முன்னிறுத்தினார். இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டு, நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மதமோ, ஜாதியோ, பணமோ, இனமோ, மொழியோ, பாலினமோ எந்தவித பாகுபாடும் கிடையாது என்பதை உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு நாளும் அந்த உறுதியை எங்களது நெஞ்சில் தாங்கிக் கொண்டுதான் கட்சியில் நாங்கள் இணைந்து இருக்கிறோம்.

அதனால் ஜாதி பார்த்து, பணம் பார்த்து இனம் பார்த்து, மதம் பார்த்து என எதையும் வைத்து எங்கள் தலைவர் யாருக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை; சேவை செய்யக்கூடிய மனநிலை இருக்கிறதா என்பதை பார்த்து தான் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். ஜாதியை வைத்து இங்கே பேச வேண்டிய அவசியம் கிடையாது. மக்களுக்காக சேவை செய்ய வந்திருக்கக்கூடிய எண்ணத்தை தான் நாம் பார்க்க வேண்டும். எங்களது தலைவருக்கு ஓட்டளித்த யாருமே, ரமேஷ் என்ற எம்எல்ஏவுக்காக யாரும் வாக்களிக்கவில்லை. அனைவரும் எங்களது தலைவர், முதல்வருக்காக ஓட்டளித்து இருக்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகளாக அவரை திரைத்துறையில் பார்க்கும்போது, திரையில் அவரை ஜாதி பார்த்து, மதம் பார்த்து யாரும் பார்க்கவில்லை. அவரை தம்பியாக, அண்ணனாக, தங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து ஓட்டளித்து இருக்கிறார்கள். விஜய் நிறுத்திய வேட்பாளர்களையும், இன்று அமைச்சர்களாக பணி அமர்த்தியவர்களையும் மக்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள். ஜாதி பார்த்து எல்லாம் இங்கு யாரும் எந்தவித பதவியும் வழங்கப்படவில்லை. எங்கள் தலைவருக்கு இது போன்ற பிரிவினையை பார்க்கக்கூடிய எண்ணம் துளியும் கிடையாது. இவ்வாறு அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்

ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட், யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
https://www.youtube.com/live/jBUlNHGvgkI?si=TnVYv4PDRf699FT4

Advertisement