கரூரில் விற்பனைக்கு குவிந்த கேரளா பலா


கரூர்: கேரளா மாநிலத்தில் இருந்து வரத்தான பலாப்பழங்கள், கரூரில் விற்பனைக்கு குவிந்துள்ளது.

தமிழகத்தில் பண்ருட்டி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மற்றும் மலை பிரதேசங்களில் பலாப்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு போதிய மழை பெய்ததால், பலாப்பழம் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் கேரளா மாநிலம் மற்றும் புதுக்கோட்டையில் இருந்து பலாப்பழம், தமிழகத்துக்கு அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. கரூர் டவுன், வாங்கல் சாலை, தான்தோன்றிமலை, சுங்ககேட் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் பலாப்பழங்களின் விற்பனை ஜோராக நடந்தது.

பெரிய அளவிலான ஒரு பழம், 100 முதல், 150 ரூபாய் வரையிலும், சிறிய பலம், 60 முதல், 80 ரூபாய் வரையிலும் விற்பனையானது.

Advertisement