நீங்கள்தான் அடுத்த பிரதமர்; ராகுலை குஷிப்படுத்திய பிரசாந்த்!
நமது சிறப்பு நிருபர்
வரும் 2029 லோக்சபா தேர்தலில், காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைக் கும். ராகுல் பிரதமராவார்' எனக் கூறி இருக்கிறார், அரசியல் வியூக அமைப்பா ளர் பிரசாந்த் கிஷோர். பீஹாரில் தனிக் கட்சி தொடங்கி படுதோல்வி அடைந்தார் பிரசாந்த்.
தற்போது இவர், பீஹாரின் பாட்னா விற்கு அருகே உள்ள, பீஹார் நவ்நிர்மான் ஆசிரமத்தில் தங்கி உள்ளார். அடுத்த சட்ட சபை தேர்தல் வரை, இங்கு தான் வசிக்கப் போகிறாராம். ஆனால், இங்கிருந்தே அரசி யல் ஆலோசனை அளித்து வருகிறார்.
'த.வெ.க.,வுடன் காங்., கூட்டணி அமைக்க வேண்டும். தி.மு.க.,விடமிருந்து விலக வேண்டும்' என, ராகுலுக்கு முத லில் கூறியவர், பிரசாந்த் கிஷோர். இவர், ராகுலுக்கு தன் தேர்தல் ஆலோசனை நிறுவனமான, 'ஐ - பேக்' வாயிலாக வியூகங்களை வகுத்து வருகிறார். அடுத்த ஆண்டு பிப்ரவ ரியில், உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு, பா.ஜ.,வின் யோகி ஆதித்யநாத், தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக முதல்வராக உள்ளார். இவரை தோற்கடிக்க, காங்கிரசுக்கு ஆலோசனை அளித்துள்ளார் பிரசாந்த்.
'தி.மு.க.,வை முதுகில் குத்தியது போல, உ.பி.,யில், சமாஜ் வாதி கட்சியுடன் உள்ள உறவை காங்., முறித்து, மாயா வதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும். அப்படி செய்தால், காங்., ஆட்சி அமைக்கும்.
தொடர்ந்து, 2029 லோக்சபா தேர்தலிலும், காங்., ஆட் சியை பிடிக்கும்' என, ராகுலுக்கு ஆலோசனை அளித்து, அவரை குஷிப்படுத்தி உள்ளாராம் பிரசாந்த் கிஷோர். கடந்த லோக்சபா தேர்தலில், சமாஜ்வாதியுடன் அமைத்து, உ.பி.,யில், 17 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வென்றது காங்கிரஸ். கூட்டணி
ராகுலுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த அறிவுரை, மல்லிகார் ஜுன கார்கே உட்பட பல காங்., தலைவர்களுக்கு பிடிக்க வில்லை. 'பிரசாந்த் கிஷோரின் பேச்சை கேட்டு கூட்டணி அமைத்தால், நம் கதி அதோகதிதான். ஆனால், ராகுலுக்கு யார் புரியவைப்பது?' என, குழப்பத்தில் உள்ளனர் காங்., தலைவர்கள்.
கருத்துக்கள் சொல்ல; ndussh@dinamalar.in
ராகுல் காந்தி இருக்கும் வரை பிஜேபி ஒருக்காலும் தோற்காது. ராகுல் காந்தி தான் பிஜேபியின் சங்கநாதம்.
அய்யய்யோ வேண்டாம் வேண்ண்டாம் இந்த காங்கிரஸ் இனி தமிழகத்தில் ஒரு தொகுதிப்பக்கம் கூட தலை காட்டாமல் செய்ய வேண்டும் ... காமராசர் இருந்த காங்கிரஸ் இப்படியா .. வருத்தமளிக்கிறது மட்டுமல்ல .. கூசுகிறது .. தமிழக மக்களின் நெஞ்சில் அழியாத காயமாய் இவர்களின் புறவாசல் முதுகில் குத்தியது
இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கிட்டாங்களே
ஒருத்தன காலி பண்ணனும்னா அவனது ஆசையை தூண்டனும் என்பார்கள். நம்பணும்ல எங்க தாத்தாவுக்கு 87 வயசாவுது. அவரு ரன்னிங் ரேஸ்ல உசேன் போல்ட்டை இரண்டாம் இடத்துக்கு தள்ளி வெற்றி பெறுவார் என்று சொன்னால் கூட நம்பலாம். ராகுல் பிரதமர் ஆவுறாருன்னா சோனியாவே நம்ப மாட்டாய்ங்க. புரோக்கர் பிராசந்த் தொழிலுக்காக கருணாஸ் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார்னு கூட சொல்வாரு.
கைபுள்ளையை இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி அடி வாங்க வைத்து கொண்டேயிருப்பார்கள்..
விஜய் காங்கிரஸ் கூட்டணி தென் இந்தியா 120-150 சீட்,வட இந்தியா இண்டி கூட்டணி விஜய் தலைமையில் 170-250 சீட் ஜெயிக்கும்,ஆக 290-400 சீட் வெல்லும், ஆனால் விஜய் தான் பிரதமர் ஆவாரு,ராவுள் ஜனாதிபதி ஆவாரு
வடிவேலு நிலைமைக்கு வந்துட்டார்
Please dont tell even for fun. Congress is extremely corrupt and family oriented party.
குஷி பண்ணல, ராகுலுக்கு சுய புத்தி இல்லைன்னு கிண்டல் பண்றார்
எத்தனை யுகங்கள் ஆனாலும் நடக்காது பீகேஏஏ.
கான்கிராஸ் செத்த பாம்பு... அம்புட்டு தான்மேலும்
-
பத்து அறப்பணிகள்... இனி பசுமை பூரிக்கும்! கால் நுாற்றாண்டு கடந்தாலும் 'வெற்றி'யின் கால் ஓயாது
-
களத்தில் புதிய எம்.எல்.ஏ.க்கள்!
-
அதிரடி காட்டுவாரா முதல்வர்? l 'ஸ்மார்ட் சிட்டி' பணியில் குளறுபடி களைய... l கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணம் வீண் l உயர்மட்ட ஆய்வுக்கு வலுக்கும் கோரிக்கை
-
விட்டால் ரோட்டின் நடுவே கடை விரித்து விடுவார்கள் போலிருக்கிறது! குறிச்சி குளக்கரை ரோட்டில் விபத்து அபாயம்
-
சிறுமிக்காக மெழுகுவர்த்தி ஏந்தி முதியோர் மனமுருக பிரார்த்தனை
-
துாய்மை பணியாளர் உணவில் இதென்ன புழு! : வயிற்று வலியால் பலர் அவதி