பால் பணியாரம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப்
பால் - அரை லிட்டர்
திக்கான தேங்காய் பால் - ஒரு டம்ளர்
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய்த்துாள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
பாலை நன்கு காய்ச்சி இறக்கி, சிறிது ஆற விட வேண்டும். அத்துடன், தேங்காய் பால், சர்க்கரை, ஏலக்காய்துாள் சேர்த்துக் கலந்து வைக்கவும். பச்சரிசியையும் உளுந்தையும் ஐந்து மணி நேரம் நன்றாக ஊற வைத்து, அரைக்கவும். மாவு, கெட்டியாக இருக்க வேண்டும். மாவு புளிக்கக்கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும்.
வாணலியின் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும். அரைத்த மாவை, சின்ன சின்ன உருண்டைகளாக பொரித்தெடுத்துக்கொள்ளவும். வெள்ளை நிறமாக இருக்கும்போதே எடுக்கவேண்டும்.
பொரித்து எடுத்த பணியாரங்களை வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து தயாராக வைத்திருக்கும் பாலில் போடவும். பத்து நிமிடங்கள் கழித்து, பரிமாறலாம். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக்கூடாது. பரிமாறுவதற்கு, பத்து நிமிடம் முன்பு பாலில் சேர்க்க வேண்டும்.
மேலும்
-
66 பேருக்கு பத்ம விருதுகள்; இன்று வழங்கி கவுரவிக்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
-
மதமாற்றம் செய்ய யாருக்கும் உரிமையில்லை: அமித் ஷா எச்சரிக்கை
-
கடல் காப்பீடு: இலக்கை நோக்கிய இந்திய பயணம்
-
சிங்கப்பூர், பிரிட்டன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம்
-
40 சதவீதம் வளர்ச்சி கண்ட வேளாண் நகைக்கடன்கள்
-
அதிக பலன் தருவது காப்பீடா, மியூச்சுவல் பண்டுகளா?