விசிகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விலகல்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த விசிக, விஜய் தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்துக் கொண்டது. அந்தக் கட்சியின் எம்எல்ஏ வன்னியரசு சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு அறிவித்துள்ளார். இவர், முந்தைய சட்டசபையில் எம்எல்ஏவாக இருந்தவர்.
பாபு தன் அறிக்கையில், ''நேற்று வரை ஒரு நடிகரை ஆர்எஸ்எஸ், பாஜ பெற்றெடுத்த பிள்ளை என்று கடுமையாக விமர்சித்த திருமாவளவன், இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது, கொள்கைகளில் தடம் மாறத் தயார் ஆகி விட்டார் என்பதையே காட்டுகிறது. குழப்பத்திலும், அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் (திருமாவளவன்) கீழ் இனியும் என்னால் பயணிக்க முடியாது,'' என்று தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (5)
raja - Cotonou,இந்தியா
25 மே,2026 - 06:11 Report Abuse
திருட்டு திமுகவின் கைக்கூலி... 0
0
Reply
Premanathan S - Cuddalore,இந்தியா
24 மே,2026 - 21:13 Report Abuse
யாரு இவரு? புள்ளையாண்டான் புதுசால்ல இருக்காரு? இவரு இந்தக்கட்சியில இவ்வளவு நாள் இருந்தாரா? 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24 மே,2026 - 20:35 Report Abuse
குழப்பத்திலும், அவநம்பிக்கையிலும் செயல்படும் தலைமை மட்டுமல்ல. பணத்துக்காக சுயமரியாதையும் அடகு வைக்கும் தலைமை திருமாவளவன் தலைமை. 0
0
Reply
Nesan - JB,இந்தியா
24 மே,2026 - 19:22 Report Abuse
நீங்கள் உத்தம புத்திரர். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை. ஆக்கிரமித்து வைத்துள்ள அடுத்தவன் சொத்துக்களை, உரியவரிடம் ஒப்படைங்க... பணம் பத்தும் பண்ணும். திருமா கூட திராவிடத்தின் பி டீம் தான். 0
0
Reply
m.arunachalam - kanchipuram,இந்தியா
24 மே,2026 - 18:45 Report Abuse
இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ் நாட்டிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது . எனவே நாம் நிம்மதியாக இருக்கலாம் . 0
0
Reply
மேலும்
-
காஷ்மீர் பல இடங்களில் என்ஐஏ சோதனை; பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை
-
2 குடும்பத்திற்கு போலீசார் உதவிக்கரம்
-
புளியமரக்கிளை விழுந்து மின் கம்பங்கள் உடைப்பு
-
இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்
-
செங்கையின் 1,164 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
-
ஏரியில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி
Advertisement
Advertisement