'கடவுள் சொத்தை திருடியவர்கள் தப்ப முடியாது': சபரிமலை தங்கம் விவகாரத்தில் அமைச்சர் அதிரடி
திருவனந்தபுரம்: ''சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், கட்சி பாகுபாடு இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் துவார பாலகர் சிலைகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட சம்பவம், நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கைது
இது தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், முன்னாள் தேவஸ்வம் போர்டு அதிகாரிகளும், இந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும், முந்தைய இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு, குறிப்பிட்ட சில நபர்களை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால், இந்த விவகாரம் கேரள அரசியலில் பூதாகரமாக வெடித்தது.
இந்நிலையில், கேரளாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் சதீஷன் தலைமையிலான காங்., அடங்கிய ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு, சபரிமலை விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளது.
இது குறித்து, தேவஸ்வம் போர்டு அமைச்சர் முரளிதரன் நேற்று கூறியதாவது: கடவுளின் சொத்தை யார் திருடி இருந்தாலும் அவர்களை சும்மா விட மாட்டோம். அது யாராக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நடவடிக்கை
குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அது கிடைத்தவுடன் நடவடிக்கைகள் தீவிரமடையும். இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரத் துறையையும் கவனிக்கும் முரளிதரன், ''எபோலா வைரஸ் பரவலால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. கேரளா முழுதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.''வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன,'' என்றார்.
ஜுன் 15 முதல் கதகளி, சிங்காரி மேளத்துடன் ஒரே ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் ஆரம்பம்..... லட்சுமி ஸ்டார்ட்......
நீங்க கூறுவது திருட்டு திராவிடர்களுக்கு பொருந்தாது.
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, கடவுளின் சொத்தை கொள்ளை அடித்தவன், மக்களை ஏமாற்றி கொள்ள அடித்து, கமிஷன் வாங்கி, லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தவன் எல்லாம் நன்றாக ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள். அரசியல்வாதிகள் உள்பட.
தேர்தலின் போது எதிர்கட்சிகளின் ஒரு வழக்கமான டயலாக் தான் இது. எவ்ளோ புருடா வில் இலவசத்தில் இந்த மாதிரி ஒரு இலவசத்தை வாக்குறுதியாக அளிப்பார். ஆட்சிக்கு வந்ததும் வெறும் சம்பிரதாயமாக இவ்வித அறிக்கைகள் விட்டு வாய்க்கரிசி போடுவார்கள் ...
. உங்களுக்கு அதுல பங்கே இல்லையோ ???? நீங்கள்லாம் ரொம்பவே யோக்கியர்கள் .....
தேர்தலில் வென்றதால் குருவாயூர் கோவிலில் கேரள முதல்வர் நேர்த்திக்கடன் ....
அடப் போங்கடா... வெத்து வேட்டு அறிக்கை.
திமுக வினர் அல்லேலூயா பாபு உள்பட: "நல்லவேளை இது தமிழ்நாட்டில் இல்லை. கேரளாவிலாம்".
வாய்ச் சொல் வீரர்கள் வாயால் சுடும் வடை
சென்ற ஆட்சியில் கோயிலில் தங்கத்தை திருடியவர்கள் கோயில் தங்கத்தை உருக்கி வங்கியில் வைத்துள்ளோம் என்று சொல்லி தங்கம் நடுவில் எங்கேயோ எவ்வளவோ சென்ற விஷயங்கள் எல்லாமே தற்போது பதவிக்கு வந்துள்ள தமிழகம் கேரளா இரண்டு புது அரசுகளும் கண்டுபிடிக்க வேண்டும்மேலும்
-
விஜய்க்கும், புதிய அரசிற்கும் 6 மாதம் முதல் ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்கணும்; சொல்கிறார் துரை வைகோ
-
பிரதமரை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்: பா.ஜ., வலியுறுத்தல்
-
தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் ராஜினாமா!
-
பாகிஸ்தான் பயங்கரவாதமே இந்தியாவின் பெருங்கவலை: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கருத்து
-
போதிய தண்ணீர் இல்லாததால் பயிர் சாகுபடி பாதியானது
-
30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவிகள்