பாகிஸ்தான் பயங்கரவாதமே இந்தியாவின் பெருங்கவலை: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கருத்து
புதுடில்லி: ''பாகிஸ்தான் மண்ணில் இருந்து கட்டவிழ்த்துவிடப்படும் பயங்கரவாதம் தான் இந்தியாவின் பெருங்கவலையாக இருக்கிறது. அந்த கவலை நியாயமானது தான்,'' என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
டில்லியில், 'குவாட்' நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நாளை ( மே 26)நடக்கிறது. இதில் பங்கேற்க நான்கு நாள் அரசுமுறை பயணமாக வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
இந்நிலையில், டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா - பாகிஸ்தான் உறவு, சமூக வலைதளங்களில் இந்தியர்களுக்கு எதிராக பரப்பப்படும் இனவெறி பேச்சுகள் குறித்து பல்வேறு முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்ட மோதலை தீர்க்கும் வகையில், பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டது. இது குறித்து இந்தியாவுடன், நாங்கள் எந்த விவாதமும் நடத்தவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவும் ஆட்சேபனை தெரிவிக்கும் என நாங்கள் நினைக்கவில்லை.
எனினும், பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் கவலை வேறு விதமானது. அந்த மண்ணில் இருந்து கட்டவிழ்க்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தே இந்தியா தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. இந்தியாவின் கவலை எப்போதும் பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை மையப்படுத்தியே இருக்கிறது. அந்த அச்சம் நியாயமானது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரவி வரும் இனவெறி கருத்துகள் குறித்து மார்கோ ரூபியோவிடம் நேற்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்: இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக வலைதளங்களில் பலர், பலவிதமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் பெரும்பாலானவை பைத்தியக்காரத்தனமானது. அப்படி கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் உண்மையானவர்களா? அல்லது போலி கணக்கு வைத்திருப்பவர்களா? என்பது கூட எனக்கு தெரியாது. அனைத்து நாடுகளிலும் சமூக வலைதளங்களில் மக்கள் இப்படித் தான் முட்டாள்தனமாக கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவை வெகுவாக நேசிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகர். இந்தியாவை அவர் நேசிக்காமல் இருந்திருந்தால், இன்று நான் டில்லிக்கு வந்து இருக்கவே முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.block_B
பாகிஸ்தான் போகும் போது மாற்றி பேசுவீங்க
அதை பின்னால் இருந்து தூண்டிவிடும் நீங்கள் மற்றும் சீனா தான் முதல் பெருங்கவலை.
நல்லாதான் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். ஆனால், திரும்ப திரும்ப அந்த பாகிஸ்தான் நாட்டுக்கு உதவியும் செய்கிறீர்கள். அதுதான் ஏன் என்று புரியவில்லை.
புலி தோல் ஓநாய் பற்றி புரியாதது ரொம்ப கஷ்டம்மேலும்
-
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 29ம் தேதி மகா சம்ப்ரோஷணம்
-
டாஸ்மாக் கடையை மூடக்கோரி மக்கள் மனு
-
தாளவாடியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து சென்ற சிறுவன் உடல் மீட்பு
-
இன்று ஈரோடு மாநகராட்சி கூட்டம்மாறிய அரசியல் களத்தால் பெரும் எதிர்பார்ப்பு
-
எம்.எல்.ஏ., வெற்றி சான்றுடன் பறந்தவர்பதவியை துறந்து த.வெ.க.,வில் ஐக்கியம்
-
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகம் திறப்பு