கடுங்குற்றங்களில் ஈடுபட்டால்... முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
சென்னை: கடுங்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்கு பதிந்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் விஜய் இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
சட்டம்-ஒழுங்கு நிலைமை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, காவல்துறை நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனையின் போது, தமிழகத்தில் கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவது குறித்து முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்துகொண்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் அவசர ஆலோசனை; தினமலர் யூடியூப், வெப்சைட் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு
வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
Is there unambiguous definition of "கடும் குற்றம்"? Otherwise there is room for misinterpretation.
நிதியமைச்சர் சாது. அஹிம்சாவாதி. அவரைப்பற்றி உலாவரும் அடிதடி வீடியோவை நம்பாதீர்.
போதையில் பொது வெளியில் நடமாடினால் மருத்துவ சோதனை செய்து போலீஸ் கைது செய்ய விலங்கிட, அதிகாரம் தேவை. மனித குணமுடைய நபருக்கு தான் சட்ட உரிமை. கடும் குற்றம் தடுப்பு போலீஸ் எப்போதும் உடல் தகுதியில் இருக்க வேண்டும். பிறப்பில் சமம். வளர்ப்பில் சமம் இருக்காது. குற்றவாளி பெற்றோர் புகாரில் இணைக்க வேண்டும். குற்றவாளிக்கு சாதகமாக வழக்காடும் வழக்கறிஞர்கள் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். குற்றவாளி முழு விவரம் போலீஸ் வெப் சைட்டில் கலெக்டர் உத்தரவு பெற்று பதிவேற்ற வேண்டும். மேகதாது முன் தமிழக ஆறுகள் இணைப்பு, குளம் குட்டைகள் மீட்பு, பராமரிப்பு துவங்க வேண்டும். அதிகாரிகளை உளவு பார்பர். முதல்வர் ஃபோட்டோ போதும்.
இன்று கள்ளமார்க்கெட்டில் பணம் பார்க்கும் சுய நிதி பொறியியற் கல்லூரிகள் மீதும் குண்டாஸ் சட்டம் பாயவேண்டும். கள்ள பணத்தை வாங்க 20 கிலோ மீட்டர் கூட்டிக்கொண்டு போய் அப்பாவி பொது மக்களிடம் பணம் பறிக்கிறார்கள். அப்பாவிகளின் அறியாமையை பயன்படுத்தி அவர்களின் ஆயுள் சேமிப்பையும் பிடுங்கும் இந்த கொடியவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றவும் . அணைத்து இடங்களையும் கவுன்சிலிங் மூலமே நிரப்ப உத்திரவிட்டு இந்த வெள்ளை காலர் கிரிமினல்களிடம் இருந்து அப்பாவிகளை காப்பாற்றவும். நிர்வாக ஒதுக்கீட்டில் வரும் இடங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை பெற்றுக்கொள்ள தடையேதும் இல்லை.
முதல்வர் விஜய் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த திமுக கொத்தடிமைகள் கைவரிசையாக இருக்கலாம். இந்த கோணத்திலும் விசாரியுங்கள். உண்மையென்றால் அவர்கள் என்கவுண்டர் செய்யுங்கள்.
யோகி அரசை போல குற்றவாளிகளை தீர்த்துக்கட்டுங்க எல்லோருக்கும் பயம் வரும்...
கார்பொரேட் சாராய கம்பெனி நடத்துபவர்கள் தமிழ் நாட்டில் மாண்புமிகுக்கள் .....இப்படி நாட்டு மக்கள் வோட்டு போட்டால் இப்படித்தான் விடியும் .....இதில் மாற்றம் என்று லாட்டரி கட்சிக்கு வோட்டு போட்டார்களாம் ....
இன்று காலை செய்தியில் காவல்துறை உயர் அதிகாரிகள் இரண்டு ஆண்கள் மத்தியில் அமர்ந்திருந்த பெண் உயர் அதிகாரி செய்தியாளர்கள் பத்து வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்ததற்கான காவல்துறை நடவடிக்கைபற்றி கேள்வி கேட்டபோது மூவரும் வாய்விட்டு சிரித்தனர். இந்த மூன்று காவல்துறை உயர் அதிகாரிகளை முதலமைச்சர் பதவி நீக்கம் செய்து உத்தரவிடவேண்டும்.
கடுங்குற்ற செயல் களில் ஈடுபடுவோர் மீது துரித நடவடிக்கையாம் .....பிரச்னையின் அடிப்படை கூட புரியவில்லை .......இப்பொது பிரச்சனை கஞ்சா அதனுடன் சிந்தெட்டிக் போதை மருந்துகள் கூட கடத்தல் செய்து விற்பனையாம் ...இந்த போதை உள்ளவனுக்கு என்ன செய்கிறோம் என்று கூட புரியாமல் எழுத முடியாத அளவுக்கு கொடிய செயல்கள் நடக்குது ......போதை பிரச்சனை கட்டுப்படுத்தாமல் இந்த பிரச்சனை தீராது ....நாடும் வீடும் நாசமாக போகின்ற நிலைமை
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல, குற்றம் நடப்பதை தடுக்க முடியாது, அதான் குற்றவாளிகளை கைது செய்து விட்டார்களே, இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கோவை சிறுமி கொலை தொடர்பான கேள்விக்கு எரிச்சலாக பதில் அளித்துள்ளாரே உங்கள் அமைச்சர். முதல்வரே அவர்களுக்கும் எப்படி கனிவாக பேச வேண்டும் என்று அறிவுரை வழங்குங்கள்.மேலும்
-
கஞ்சா, போதைப் பொருள் புழக்கம் குறித்து தனி கவனம் செலுத்தி கட்டுப்படுத்தப்படும் வடக்கு மண்டல ஐ.ஜி., பிரவீன்குமார் அபினபு உறுதி
-
பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு தடுக்க வேண்டும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை
-
வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை
-
அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் உள்ளிட்ட 3 பேர் திடீர் ராஜினாமா!
-
போக்குவரத்துக் கழகத்தில் அமைச்சர் ஆய்வு
-
வேன் மோதி விபத்து அரசு டாக்டர் பலி