ஒரு துளி ரத்தத்தில் புற்றுநோயை கண்டறியும் கருவி; சீன விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு
நமது சிறப்பு நிருபர்
சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு துளி ரத்தத்தில் இருந்து புற்றுநோயை மிகத் துல்லியமாகக் கண்டறியும் கருவியை கண்டுபிடித்து இருப்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
சீனாவின் ஹாங்சோவில் உள்ள வெஸ்ட்லேக் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள்,செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரே ஒரு சொட்டு காய்ந்த ரத்தத்தில் இருந்து குடல்,வயிறு மற்றும் கணையப் புற்றுநோய்களைக் கண்டறியும் முறையை உருவாக்கியுள்ளனர். இவர்கள் உருவாக்கி இருக்கும் கருவிகள் மூலம் ஒரு துளி ரத்தத்தில் புற்றுநோயை மிகத்துல்லியமாக, ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.
இந்த புதிய கண்டுபிடிப்பு புற்றுநோயைக் கண்டறிவதில் மருத்துவ உலகில் பெரும் புரட்சியாக கருதப்படுகிறது. ஆரம்ப நிலை நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதில், இந்தப் புதிய கண்டுபிடிப்பு வழக்கமான முறைகளை விட 10,000 மடங்கு துல்லியமாக இருக்கும்.
சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த கருவி மருத்துவ துறையினர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் இந்த கருவியை பயன்பாட்டுக்கு கொண்டு வர சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.
சொல்வதற்கில்லை கேன்சர் உருவாகும் கருவி கூட இருக்கலாம். அடிப்படை நாகரிகம் இல்லாத செங்கிஸ்க்கான் தைமூர் வழி தோன்றல்கள்
கொரோனா குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு பார்க்கலாம்
China was far behind in software while India used to be a "IT superpower". Now they have overtaken everybody in technology and are competing with USA. But our IT companies are still happy doing service to American companies without creating anything. Typical slave mentality
சீனா அறிவியல் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு உயிரியல் , இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் போன்ற துறைகளில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது ஆனால் இங்கு உள்ள ஆட்சியாளர்கள் ஈகோ காரணமாக நம்மை எட்டி உதைக்கும் அமெரிக்கா தான் வேண்டும் என்று தனது சுயநலனுக்காக இருக்கிறார்கள்
மிகச் சரியாக சொன்னிர்கள்
அவன் எட்டி உதைக்கிறான் இவன் கட்டி பிடித்து முதுகில் குத்துகிறான்
அடடா . எங்க ஊர்ல பெங்களூர்ல நாய்களை வைத்து அதன் மோப்ப சக்தியால் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலே கண்டுபிடிப்பதை பார்க்கும் போது இந்தியா எவ்வளவு முன்னேற்ற பாதையில் போய்கொண்டிருக்கிறது என்பதை பெருமையாக பார்ப்போம் . எல்லா நாடுகளும் ஒன்று சேர்ந்தால் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் நாள் அருகிலே உள்ளது
நாம் ன்னும் சீன கண்டுபிடிப்பான பட்டாசுகளை காதில் சொருகிக்கொண்டு ரோட்டில் நின்று டான்ஸ் ஆடுகிறோம்
மனித குலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
Great
வாழ்த்துக்கள்.
சீனா விஞ்ஞானத்தில் முன்னேறி வருக்குறது
will disagree.just few days back he said India equal to China