விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு; குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு

35

நமது நிருபர்



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்து துாத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே இயற்கை உபாதையை கழிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவி மாயமானார். பிறகு காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில் மாணவியின் உடல் சடலம் மீட்கப்பட்டது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் கடந்த மார்ச் 10ம் தேதி சட்டசபை தேர்தலுக்கு முன்பு நடந்ததால் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த வழக்கில் தர்ம முனீஸ்வரனை போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது.மொத்தமாக 71 சாட்சிகளிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.


கடந்த இரண்டு மாதமாக நடந்த விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று (மே 25) தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தா தீர்ப்பு அளித்தார். தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்து துாத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

பிரத்யேக வீடியோ!

தூத்துக்குடி மாணவி கொலை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை குறித்து தினமலர் யூடியூப் மற்றும் வெப்சைட்டில் பிரத்யேக வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement