மகள் மாயம் தாய் புகார்

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மனைவி அன்னலட்சுமி, 55; இவருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளான மகனும், சிவரஞ்சனி 30,உமாபாரதி என்று இரு மகள்கள் உள்ளனர்.இதில் உமாபாரதி கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லுரியில் பி.ஏ.,(ஆங்கிலம்) முன்றாமாண்டு படித்து வந்தார்.கடந்த 20 ம் தேதி இரவு வீட்டில் படுத்து துாங்கிய உமாபாரதியை மறுநாள் காலை காணவில்லை.பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரும்படி தாய் அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன உமாபாரதியை தேடி வருகின்றனர்.

Advertisement