(அரை பக்கம் விளம்பரம் வருகிறது) பகவதி அம்மன் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவக்கம்

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அத்தியூத்து உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன், கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் மே 27 ல் நடக்கிறது. இந்நிலையில், விழாவை முன்னிட்டு நேற்று காலை அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் கும்ப அலங்காரம், முதற்கால யாகசாலை பூஜையும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழாவின் தொடர்ச்சியாக இன்று(மே 26) இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடக்கிறது. நாளை மே 27 காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா கமிட்டியாளர்கள், மற்றும் குலதெய்வ குடிமக்கள், கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

–––

Advertisement