அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றதற்கு எதிர்ப்பு; சபாநாயகரிடம் இபிஎஸ் தரப்பு மனு

10

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரின் ராஜினாமாவை ஏற்ற முடிவை வாபஸ் பெற வலியுறுத்தி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் மனு அளித்தனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் இபிஎஸ் தரப்பு ஒரு அணி, எஸ்.பி வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு ஒரு அணி என இரண்டு அணியாக செயல்பட்டு வருகின்றனர். இபிஎஸ் தலைமையில் 22 பேர்; முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையிலான அணியில் 25 பேர் உள்ளனர்.

அதிமு.க.,வில் வேலுமணி அணியில் இருந்த, மதுராந்தகம் எம்.எல்.ஏ., மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார், தாராபுரம் எம்.எல்.ஏ., சத்யபாமா ஆகியோர், ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக, சபாநாயகர் அறிவித்தார். இந்த 3 எம்எல்ஏக்கள் ஆளும் கட்சியான த.வெ.க.,வில் ஐக்கியமாகினர்.


இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரின் ராஜினாமாவை ஏற்ற முடிவை வாபஸ் பெற வலியுறுத்தி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் மனு அளித்தனர். சபாநாயகரை நேரில் சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓஎஸ் மணியன் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.

அப்போது அவர்கள் கட்சி தாவல் புகாருக்கு ஆளான எம்எல்ஏக்கள் ராஜினாமாவை எப்படி ஏற்றகலாம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

Advertisement