மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
நமது நிருபர்
மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் செய்து கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள கணியம்பாடி தவெக ஒன்றிய செயலாளர் இருந்துவந்த விஜயகுமார் எங்கள் அரசு தான் ஆட்சியில் இருக்கிறது என கூறி செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.
இது குறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது விஜயகுமாரை கட்சியில் இருந்து நீக்குவதாக தலைமை உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜயமோகன் அறிவித்துள்ளார்.
தினமலர் நேரலை
மாமூல் கேட்ட தவெக நிர்வாகி; தூக்கியடித்த விஜய்; தினமலர் யூடியூப் மற்றும் வெப்சைட்டில் பிரத்யேக வீடியோ நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (2)
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
26 மே,2026 - 17:26 Report Abuse
இதுதான் தூய்மையான ஆட்சியின் லட்சணம்...? அப்பவே சொன்னேனே கேட்டீங்களா... “தேனெடுக்குறவன் கைய நக்காம இருக்கமாட்டான்”...னு. எவன்டா யோக்கியனா இருப்பான்...? இவர் மேடையில கத்துனாரு... இப்ப அந்த கத்தலே காணாம... ஊமையாயிட்டார் அது வேற விஷயம் “நான் லஞ்சம் வாங்கவும் மாட்டேன்... வாங்கவும் விடமாட்டேன்...” அவன் தொண்டன் அவன் வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டான்...? இது ஒரு நிகழ்வுதான் வெளியே தெரிஞ்சது... தமிழ்நாடு முழுவதும் கலெக்சன், கரப்சன் நடந்துட்டுதான் இருக்குது... இப்பத்தான் ஒருத்தர் சொன்னாரு... விஜய் என்ன... அவன படைச்ச ஆண்டவனே வந்தாலும் இந்த லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க முடியாது... வேணும்னா... பேப்பர்ல எழுதி அழிக்கலாம்...னு. தேனெடுக்குறவன் புறங்கைய நக்காம இருக்கமாட்டான்...? 0
0
Reply
சாமானியன் - ,
26 மே,2026 - 12:43 Report Abuse
அடப்பாவிகளா! ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகலே. அதற்குள் பணப்பசி. கடவுளே ? 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement