இசக்கி சுப்பையா ராஜினாமா ஏற்பு: அறிவித்தார் சபாநாயகர்
நமது சிறப்பு நிருபர்
அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தட்டச்சு செய்து கொண்டு வந்த ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், கைப்பட எழுதி கொடுத்த கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளவர் இசக்கி சுப்பையா. இவர் அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.2011-ம் ஆண்டு முதன்முறையாக அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், சிறை மற்றும் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் சில சர்ச்சைகளில் சிக்கியதால், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2 மாதங்களிலேயே அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இதனை தொடர்ந்து 2016 தேர்தலில் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்த முருகையா பாண்டியன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இசக்கி சுப்பையாவுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், கட்சியில் ஓரங்கட்டப்பட்டார்.
பின்னர் 2019 மக்களவை தேர்தலின் போது டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வில் இணைந்து தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதே ஆண்டு மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்த அவர், 2021 மற்றும் 2026 சட்டசபை தேர்தல்களில் அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்றார். தேர்தலுக்கு பிறகு, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணியினரை சந்தித்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் நீக்கினார். இந்நிலையில் இன்று (மே 26) அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக கடிதம் கைப்பட எழுதப்படவில்லை எனக் கூறி, சபாநாயகர் கடிதத்தை ஏற்க மறுத்தார். பிறகு இசக்கி சுப்பையா ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதி கொடுத்த நிலையில் அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த இசச்கி சுப்பையா பின்னர் பனையூரில் உள்ள தவெக அலுவலகம் சென்றார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் முறைப்படி இணைந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி;
தொகுதி மக்களின் நலன்கருதி அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தேன். எம்எல்ஏவாக இருந்து என்ன செய்ய முடியுமோ அதை தான் செய்ய முடிந்தது. வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
என் தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்ற காரணத்தால் ஆளும்கட்சியான தவெகவில் இணைந்துள்ளேன். முதல்வரையும் பார்த்து எனது கோரிக்கைகளை சொல்லி உள்ளேன். நிச்சயமாக நல்லது செய்து தருவோம் என்று உறுதி அளித்துள்ளனர். வேறு எந்த காரணமும் இல்லை. முதல்வரின் சிறப்பான ஆட்சியை கடந்த 15 நாட்களில் கண்டுள்ளேன்.
இவ்வாறு இசக்கி சுப்பையா கூறினார்.
@block_B@
காலக்கெடு விதிக்க முடியாது!
நிருபர்களிடம் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது: எனக்கு யாரும் காலக்கெடு விதிக்க முடியாது. ராஜினாமா கடிதம் முறையாக வழங்கப்பட்டால் அதை ஏற்பது என் கடமை. இபிஎஸ் தரப்பு மனு குறித்து சட்டமன்ற விதிகளின்படி உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும். எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றதில் எனது முடிவே இறுதியானது. அதிமுகவினர் வாதங்களை பொருட்படுத்த தேவையில்லை. சட்டசபை விதிகளுக்கு உட்பட்டு நான் செயல்படுவேன். இவ்வாறு சபாநாயகர் கூறினார்.block_B
வாசகர் கருத்து (13)
jaya - Jakarta,இந்தியா
26 மே,2026 - 15:50 Report Abuse
அவர்கள் யாருடைய பணத்தை வீணடிக்கிறார்கள்? தங்கள் பதவியை ராஜினாமா செய்யும் இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தேர்தலுக்காக அரசு செலவழித்த பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
மேலும், இவர்கள் அனைவரும் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்சம் 5 அல்லது 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இவர்களுக்குத் தங்கள் கொள்கையின் மீது உறுதியான நம்பிக்கை ஏற்படும். 0
0
Reply
Ms Mahadevan Mahadevan - கோவில்பட்டி,இந்தியா
26 மே,2026 - 14:48 Report Abuse
தற்கால அரசியலில் தூய சக்தி என்பது கிடையாது . ஜோசப் அண்டு கூட்டம் மிக மொத்தமான கூட்டம் . யோக்கியமானவர் என்றால் இவைகளை ஏற்க மருத்த்திருப்பா இர் 0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
26 மே,2026 - 13:37 Report Abuse
தூயசக்தி ஆட்சி. கர்த்தர் இந்த குறுக்குபத்தி வழியைத்தான் போதித்தாரா தகுதியற்றவர்களை தேர்ந்தெடுத்த தற்குறிகளால் இன்னும் எத்தனை அயோக்கியத்தனங்களோ 0
0
Reply
Rajah - Colombo,இந்தியா
26 மே,2026 - 13:31 Report Abuse
தாங்கள் ஆதரிக்கும் கட்சிகளின் நிலைப்பாட்டை ஆதரித்து வாசகர்கள் தங்கள் கருத்துக்களை உணர்ச்சி வசப்பட்டு வெளிப்படுத்துகின்றார்கள். அதில் தவறே இல்லை. அதே சமயம் உங்கள் கட்சிகளின் தவறுகளையும் குறிப்பிட்டு அறிவுரைகளையும் வழங்கவும். பாஜக தொண்டனாக இருக்கும் நான் அண்ணாமலை அவர்களை தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கியது மாபெரும் தவறு என்று பல தடவைகள் குறிப்பிட்டிருக்கின்றேன். ஒருவர் எதிரியானாலும் அவர் அணியும் உடை, மதம், ஜாதி, உருவம் என்பவற்றை வைத்து கேலி செய்வது அநாகரீகமானது. அது தமிழர் பண்பாடும் இல்லை. 0
0
Reply
V K - Chennai,இந்தியா
26 மே,2026 - 13:27 Report Abuse
கடைசில கடை சாத்திவிட்டு எடப்பாடி தொகுதி எம் எல் ஏ பழனி ராஜினாமா செய்யப்போகிறார் 0
0
Reply
Sridhar - Chennai,இந்தியா
26 மே,2026 - 13:14 Report Abuse
All these people must be banned from coning elections forever 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
26 மே,2026 - 12:58 Report Abuse
கருப்பு கோட் முதல்வர் கருப்பு கோட்டை கழட்டி விட ஃபீனிக்ஸ் பறவை எல்லா வழிகளிலும் கல் போட்டு வச்சிருக்கு. தன்னோட ஆளுங்க இதே மாதிரி பதவியை ராஜினாமா பண்ண மாட்டாங்கங்குற தைரியத்துல கல் வேலை நடத்துறாப்ல. தோத்துட்டோம்ங்குற துக்கத்தை தீர்க்க தவெகவை தழுவ சில பேர் இரும்பு கோட்டையிலிருந்து வெளியேற தயாராயிட்டு இருக்காங்க ன்னு நியூஸ் வருது. இன்னும் ஒரு வாரம் போவட்டும் . மாடிஃபைடு பிக்சர் வித் இம்ப்ரூவ்டு ஸ்ட்ரெங்த் சட்ட சபையை பாக்கலாம். இப்போதைய 116 தேவை மறுபடியும் 118க்கே வந்து நிக்கும். மேலும் ராஜினாமாக்களை எதிர் பாக்கலாம். குதிரை வேக குதிரை நேரத்தை பத்தி ஃபீனிக்ஸ் பறவையின் புது வியாக்கியான அறிக்கையை படிக்கணுமே. வெயிட்டிங். 0
0
Reply
ram - mayiladuthurai,இந்தியா
26 மே,2026 - 12:51 Report Abuse
என்ன சட்டமோ இங்கு, இதுபோல ஆட்களின் அசையும் அசையா சொத்துக்களை அதுவும் அந்த சோபா வையும், பறிமுதல் செய்து தேர்தல் செலவுகளை வட்டியுடன் வசூல் பண்ண வேண்டும். இப்போது இருக்கும் ஆயில் CRISIS , மீண்டும் தேர்தல் தெண்ட செலவு. இதுபோல ஆட்களை மீண்டும் தேர்தலில் பங்கேற்க வாழ்நாள் தடை செய்ய வேண்டும். இவனுக ராஜினாமா திருட்டு திமுகவுக்கு சாதகமாக போகும். நன்றிகெட்ட ஜென்மங்கள். 0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
26 மே,2026 - 12:49 Report Abuse
அதிமுக, மதிமுக ஆக மாறிவருகிறது 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26 மே,2026 - 12:43 Report Abuse
ஆனால் இந்த அரசியல்வாதிகள், வியாதிகள் குரங்குகளை மிஞ்சிவிட்டார்கள் கட்சி தாவுவதில். இவர்களுக்கு வோட்டு போடும் மக்களை முதலில் நன்றாக உதைக்கவேண்டும். 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement