ஏமாற்றங்களுக்கு மக்கள் மனதளவில் தயாராக இருக்கணுமா: முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி
சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை தவெக அரசு ஏமாற்றி உள்ளதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி,இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா எனக்கேள்வி எழுப்பி உள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பெற்ற கடனை தள்ளுபடி செய்து, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, குறு விவசாயிகளுக்கு, 5,000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாய் வரை, சிறு விவசாயிகளுக்கு, 5,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாய் வரை, அவர்கள் வாங்கிய கடன் தொகைக்கு ஏற்ப, தள்ளுபடி கிடைக்கும். இந்த திட்டத்தை அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது தவெக அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது,5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.
ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.
இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar? இவ்வாறு அந்த அறிக்கையில் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் சற்றே ஏமாளிகள் , நீங்க வாங்கிய கடனை நீங்க தான் அடைக்க வேண்டும் என்று ஒரு போராட்டம் பண்ணி திமுக காரர்களின் சொத்துக்களை ஜப்தி செய்யும் அளவிற்கு போராடினால் என்னாகும் வாரிசே
ஹலோ கடந்த செப்டம்பர் இ பி பில் 290 யூனிட்க்கு ரூபாய் 212 பில் வந்தது. இந்த மே மதப்பில்ல 239 யூனிட் ங்கு ரூபாய் 352 வந்துள்ளது. ஜோசப் இதுசரிய? . எதை தள்ளுபடி செய்தீ ர்கள். தயவு செய்து விளக்குங்கள்
524 வாக்குறுதிகளில் 50 மட்டும் நிறைவேறிவிட்டு மக்களை ஏமாற்றியதால் தான் உனது கட்சியை மக்கள் புறக்கணித்து விட்டனர். சனாதானத்தை ஒழிப்பேன் என்று கத்தி கொண்டு இருந்தாய் மக்கள் உன்னை ஒழித்து விட்டனர்.முதல்வர் கனவு கோவிந்தா
அட்ரா ..சக்க. அட்ரா ..சக்க. அட்ரா ..சக்க. அட்ரா ..சக்க. அட்ரா ..சக்க.
அட்ரா ..ஆஆ ...சக்க்க்க்க .......
கோவிந்தா ...கோவிந்தா ...
அடுத்த தேர்தலில் தி மு க வின் சின்னம் சங்கு ........உஉஉஉ ....
உங்க விடியா ஆட்சிய விட இவிங்க ஆட்சி எவ்வளவோ மேல். பேசாம உக்காரு.
இதற்கு உதய தேர்தல் அறிக்கையிலும் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் "அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம். விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கடன் வாங்காத விவசாயிகள் உடனடியாக நகைக்கடன் வாங்கிக்கொள்ளும்கள்" என சொன்னதை நம்பி எத்தனை விவசாயிகள் நகை கடன் வாங்கினார்கள். தள்ளுபடி செய்யவில்லையென்பதால் அவர்களது நிலை என்ன ஆனது என நேரில் கண்டவன். எனவே உங்களது மாடல் அரசு விவசாயிகளை மனதளவில் நன்கு தயார்செய்துவிட்டது
தம்பி உங்க சுயரூபம் எல்லாம் மக்களுக்கு நல்லாவே தெரிஞ்சு போச்சு. 50 வருஷம் ஆட்சி செஞ்சும் நீங்க கிழிக்கமுடியாதத 15 நாள் ஆட்சியில செய்யலன்னு அபாண்டமான குற்றம் சொல்றது எல்லாம் மக்காள் புரிஞ்சுதான் இருக்காங்க. உங்க ஆட்களை ஏவிவிட்டு மின்சாரத்தை செயற்கையா பிரச்னை உருவாக்கிறது, மக்களை சும்மா தூண்டி விடுறது எல்லாம் பாத்துக்கிட்டுதான் இருக்கோம். இனி நீங்க வரவே முடியாது என்பது உங்களுக்கு தெரிஞ்சு போச்சு. நீங்க செய்த கேடு கெட்ட ஆட்சியின் அவலங்களையும் ஊழல்களையும் இனி ஒவ்வொண்ணா விஜய் வெளியே கொண்டுவருவார். திருட்டு திராவிடத்தின் போலி முகம் மக்களிடம் அம்பலப்படுத்தப்படும். எதோ விஜய்க்கு கெட்டபெயரை ஏற்படுத்தி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று நினைக்கீறீங்க போல. பெரிய தத்தியை நிற்க சொல். உங்களை மக்கள் விரட்டியடிப்பார்கள்.
உங்களை தூக்கி அடித்ததில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இனிமேல் குடும்ப ஆட்சிய்க்கு முற்றுப்புள்ளியை வைத்ததைய நினைத்து புது தெம்புடன் இருக்கிறார்கள் நம்மாலும் மாற்றம் செய்ய இயலும் என்று நினைத்து.
யாருக்கெல்லாம் உதயநிதி பாடல்களுக்கு ஆடும் டான்ஸ் ஸ்டெப் பிடிக்கும்? நம்ம மைக்கேல் ஜான்சனுக்கே டப் கொடுப்பாரு.
ஹி...ஹி...ஹி... ஐ ஆம் வெரி சாரி. அது மைக்கேல் ஜாக்சன். ஜான்சன் அல்ல. யானைக்கும் அடி சறுக்கும்.
உதயநிதி ஓரமா உக்காரு
நீங்கள் ஏற்க்கனவே ஏமாற்றி மக்களை பக்குவப்படுத்திவிட்டீர்கள். இந்த மாதிரியான ஏமாற்றும் பித்தலாட்ட வேலைகளில் திராவிட மாடலை எந்த கொம்பானாலும் மிஞ்சமுடியாது .