அதிமுக.,வில் வேலுமணி கோஷ்டியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா! தவெக.,வில் ஐக்கியம்
சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி கோஷ்டியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்கள் நேற்று திடீரென தங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததுடன், ஆளும் கட்சியான த.வெ.க.,வில் ஐக்கியமாகினர். இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க., 59; அ.தி.மு.க., 47 தொகுதிகளிலும் வென்றன. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் ஐந்து; இந்திய கம்யூ., - மார்சிஸ்ட் கம்யூ., - வி.சி.க.,- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளிலும், தே.மு.தி.க., ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
தே.மு.தி.க.,வை தவிர, தி.மு.க., கூட்டணி கட்சிகள், த.வெ.க.,விற்கு ஆதரவு அளித்தன; அக்கட்சி ஆட்சி அமைத்தது.
காங்கிரசுக்கு இரண்டு அமைச்சர்கள், வி.சி.க., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டன. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க., நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
சட்டசபையில், த.வெ.க., அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஓட்டெடுப்பு நடந்த போது, பா.ம.க., நடுநிலை வகித்தது.
அ.தி.மு.க.,வில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் 22 பேர்; முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையிலான அணியில் 25 பேர் என, இரண்டு அணியாக கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பிரிந்தனர். வேலுமணி அணி ஆதரவால், 144 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் முதல்வர் விஜய், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.
இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அமைச்சரவையில், வேலுமணி தரப்பு அமைச்சர் பதவியை எதிர்பார்த்தது. ஆனால், அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அ.தி.மு.க., சேர்த்து கொள்ளப்படவில்லை.
இதனால், வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் விரக்தி அடைந்தனர். சிலர் பழனிசாமி பக்கம் செல்லத்துவங்கினர்.
இந்நிலையில், அ.தி.மு.க.,வில் வேலுமணி அணியில் இருந்த, மதுராந்தகம் எம்.எல்.ஏ., மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார், தாராபுரம் எம்.எல்.ஏ., சத்யபாமா ஆகியோர், நேற்று பிற்பகல் தலைமை செயலகம் வந்தனர்.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறைக்கு சென்றனர். அங்கு மூன்று பேரும், தங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தனர்.
அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக, சபாநாயகர் அறிவித்தார். மூன்று எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளதால், திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து தற்போது நான்கு தொகுதிகள் காலியாகி உள்ளன. சட்டசபை பணிகள் துவங்கும் முன்பே, தேர்தலில் வெற்றி பெற்ற, 21 நாளில், மூன்று எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த மூவரும், உடனே த.வெ.க.,வில் இணைந்தனர். இது, த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்த, வேலுமணி தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் ஐந்து அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும், தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைய பேச்சு நடந்து வருவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. இது, தமிழக அரசியல் வட்டாரத்தில், திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
@block_B@ அமைச்சர் அறையில் அடையாள அட்டை: எதிர்க்கட்சியினர் கொந்தளிப்பு
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த மரகதம், ஜெயகுமார், சத்யபாமா ஆகியோர், ஜார்ஜ் கோட்டையில் இரண்டாவது தளத்தில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு சென்றனர். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து மூவருக்கும் த.வெ.க., உறுப்பினர் அடையாள அட்டையை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, அவரது அறையில் ஒரு மணிநேரம் காத்திருந்த மூன்று பேரும், முதல்வர் விஜய் அலுவலகத்திற்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றனர். தலைமை செயலகத்தில் தன் அறையில் வைத்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கியதை, பல்வேறு எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்துள்ளன.block_B
@block_Y@ கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு இனி த.வெ.க.,வுக்கு தேவையில்லை
தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள த.வெ.க.,வுக்கு தற்போது, 107 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தனிப்பெரும்பான்மைக்கு, 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. தற்போது நான்கு தொகுதிகள் காலியான நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு, 116 எம்.எல்.ஏ.,க்கள் போதும். அதற்கு, ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு மட்டுமே, த.வெ.க.,வுக்கு தேவை. அந்த வகையில், வெளியிலிருந்து ஆதரவு தரும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இல்லையென்றாலும், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஆதரவோடு, தனிப்பெரும்பான்மையை நிருபிக்கும் நிலைக்கு, த.வெ.க., முன்னேறி உள்ளது. இன்னும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்து, இடைத்தேர்தலில் த.வெ.க., அந்த தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனிப்பெரும்பான்மை பெற்று விடும். அதை நோக்கியே, அக்கட்சி தலைமை நகர்ந்து வருவதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. block_Y
@block_P@ அ.தி.மு.க., பலம் சரிவு
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 47 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது, மூன்று எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததால், அக்கட்சியின் பலம், 44 ஆக குறைந்துள்ளது.block_P
@block_G@ 'அரவணைப்பது ஆபத்தாகும்'
'அ.தி.மு.க.,விலிருந்து விலகி, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ள மூவரை, த.வெ.க., அரவணைப்பது ஆபத்தாகும்' என, அக்கூட்டணியில் உள்ள வி.சி.க., விமர்சித்துள்ளது. இதுகுறித்து, வி.சி.க., பொருளாளர் பாலாஜி வெளியிட்ட அறிக்கை: மூன்று எம்.எல்.ஏ.,க்களின் செயல் அறமற்றது. அவர்களை த.வெ.க., அரவணைப்பது ஆபத்தாகும். தாங்கள் உண்மையான மற்றும் நேர்மையான அரசியலில் ஈடுபடுவோம் என, த.வெ.க., முன்வைத்த கூற்றுக்கு எதிரானது. இவை, அக்கட்சிக்கு சந்தேகத்திற்கு இடமில்லாத அச்சுறுத்தலாகும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.block_G
ஆதவ் அர்ஜுனனின் ஸ்லீப்பர் செல் லீமா ரோசை முதலில் வெளியேற்றுங்கள் , அவரே எல்லோரையும் ஆ தி மு க விலிருந்து வெளியேற்றி கொண்டிருக்கிறார் .
இன்னும் பத்து நாட்களுக்கு இந்த குதிரை பேரம் நடக்கும்.எவன் எவன் போகிறான் என்பது ஏற்கனவே முடிவான ஒன்று..பரபறப்பிற்காக தினம் ஒன்று இரண்டு என சிலநாட்கள் அதிமுக சுற்றியே வரும்.இப்ப இருக்கும் 47ல் இருபது பேர் போனாலும் இயக்கம் என்றும் போல அதே பலம் இருக்கும்.போகும் அனைவருமே விலைக்கு வாங்கப்பட்டவர்கள்.இவர்கள் கட்சிக்கு என்ன லாபம் செஞ்சிருக்க போகிறார்கள்.வெறும் இருபது பேரோ இரண்டு பேரோ இந்த எம் எல் ஏக்கள் பலத்தை பார்த்து எடைபோட்டு ஏமாற வேண்டாம்.கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் கட்டமைப்பில் எந்த சேதாரமும் இல்லை.எடப்பாடி மீது தனி பகை கொண்டவர்களுக்கே இது இனிப்பான விசயம்.
வீட்டை பாதுகாப்பாக வைத்திருந்தால் கொள்ளை போவதற்கு வாய்ப்புகள் இருக்காது. 3 போய்விட்டது. இருபத்தையாவது காப்பாற்றுங்கள். இல்லையேல் வீடு காலியாகிவிடும். தவறு நம் பக்கம் இருக்கும்போது மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது அர்த்தமற்றது. நீங்கள் இரண்டாகப் பிரிந்து ஒற்றுமையின்றி செயல்படுவதால் அதிருப்தி காரணமாக இன்னும் பலர் வெளியேற வாய்ப்புகள் உண்டு. உங்கள் தவறை திருத்தி உங்களுக்குள் விட்டுக் கொடுத்து ஒரு சுமுகமான முடிவுக்கு வாருங்கள். திமுகவுடன் சேர்ந்து தவறான பாதைக்கு செல்லாதீர்கள். கட்சியை அம்மா காலத்தைப் போல் மீண்டும் உங்களால் கொண்டுவர முடியும். அது உங்கள் கையில் இருக்கிறது. புரட்சித் தலைவரின் தத்துவப் பாடல்களை கேளுங்கள்.திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்.
திறந்த வீட்டில் உள்ளே புகுந்து திருடினாலும் திருடு திருடுதான் ....
அண்ணாமலைக்கு அதிமுக மேல் இருந்த கருத்து உண்மை ஆகிக்கொண்டிருக்கிறது.
மானஸ்தர்கள்.
தூய சக்தியின் பவிஷு இவ்ளோ சீக்கிரம் வெளிப்படும் என்பது எதிர்பார்த்தது தான் ... லாட்ரிக்காரன் பின்னிருந்து பிஜிபி ஆட்டுவிக்குது ....அதன்படி பிஜிபி பாணியை கையில் எடுத்து பெரும்பாண்மை பெற முயற்சிக்கிறார்கள் ... தமிழகத்தின் மானத்தை கப்பல் ஏற்றுகிறார்கள் ...
தவெகவுக்கு தாவியதைவிட மூன்று அதிமுக எம்.எல.ஏ.க்களும் பிச்சை எடுத்து வாழவேண்டும்.
இப்ப மட்டும் என்ன?? ஒவ்வொரு தொண்டனின் உழைப்பும் வேஸ்ட் ஆகிவிட்டதே..
கெரகத்த ! இந்த 3பேர் வீட்டுக்கும் சோபா போயிருக்கும்.ஆனா தள்ளபதி வந்திருந்தா எங்க வீட்டுக்கு சோபா வந்துருக்கும்.ஆக இப்படியாக விசிலு வந்து சோபா வியாபாரம் பிச்சிக்கிட்டு போகுது.
வாக்களித்த மக்களை அவமதிக்கும் விதமாக இம்மாதிரி அரசுக்கு செலவு வைக்கும் இம்மாதிரி தேர்தல் முடிந்தவுடன் ராஜினாமா செய்யும் வாக்காளர்களை இனி ஆயுளுக்கும் தேர்தலில் போட்டியிடமுடியாத சட்டம் வேண்டும்.
அதிமுகவில் இப்போ ஸ்டார் அந்தஸ்த்து உள்ளவர்கள் யாரும் இல்லை. தலைமை பண்பு இல்லா பழனிசாமியால் ஏதும் செய்ய முடியாது. இதோடு அவர் பதவி விளக்க மாட்டான் என்கிறார்.
அதிமு கட்சியினர் தவேக்காவுக்கு செல்வதே நல்லது. பழனிசாமியை தவிர எல்லோரும் தவேக வுக்கு போவதே நல்லது.
இந்தா லண்டனில் இருந்து ஜோசியம் சொல்லிட்டார்ல த.வெ.க தற்குறி.
கட்சி மாறியுள்ளார் ஓட்டு போட்ட மை அழிவதற்குள். இவர் தூய சக்தியாம்.மேலும்
-
கைப்பட எழுதிய ராஜினாமா கடிதம் ஒப்படைத்தார் இசக்கி சுப்பையா
-
மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
-
ஏமாற்றங்களுக்கு மக்கள் மனதளவில் தயாராக இருக்கணுமா: முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி
-
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றதற்கு எதிர்ப்பு; சபாநாயகரிடம் இபிஎஸ் தரப்பு மனு
-
தமிழக சட்டசபையில் 4 தொகுதிகள் காலி
-
மோடி பிரதமராக பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டு நிறைவு; நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர்கள் பட்டியலில் 2வது இடம்!