பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் விஜய்; தமிழக நலன்கள் குறித்த கோரிக்கை மனு சமர்ப்பிப்பு
புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் இன்று சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் நலன்கள் குறித்து கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் அவர் அளித்தார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அரசு முறை பயணமாக முதல்வர் விஜய் இன்று தலைநகர் டில்லி புறப்பட்டார். இன்று காலை 10 மணி அளவில் தனி விமானம் மூலம் அவர் டில்லி சென்றார்.
தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு முதல்வர் விஜய் சென்றார். அங்கு அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் மாலை பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்தார். புதியதாக கட்டப்பட்ட பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

முன்னதாக, 2014ம் ஆண்டு கோவையில் மோடியை விஜய் சந்தித்து பேசினார். அதன் பிறகு பிரதமரான மோடியை, முதல்வரான விஜய் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் ஊடே, 2014ம் ஆண்டு இருவரும் சந்தித்து பேசிய போட்டோக்கள் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
நிதியமைச்சருடன் சந்திப்பு
தொடர்ந்து இன்று மாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதல்வர் விஜய் சந்தித்தார். தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
வாசகர் கருத்து (11)
Palanisamy T - Kuala Lumpur,இந்தியா
27 மே,2026 - 18:10 Report Abuse
இவர் கோரிக்கை மனுவை நேராக பிரதமரிடம் கொடுத்ததே மிகப் பெரிய விஷயம். பிரதமர் ஏற்றுக் கொள்வாரா இல்லையாவென்பது வேறு விஷயம். ஆனால் முன்னாள் முதல்வர் ஸ்டாளின் அவர்கள் ஒரு மனுவையாவது பிரதமரிடம் நேரடியாக சமர்ப்பித்துள்ளாரா? தமிழக பிரச்சனைகளை பிரதமரிடம் நேரடியாக பேசியுள்ளாரா? மூன்று முறை பிரதமர் அவர்கள் தமிழகம் வந்தபோது ஒருமுறையாவது பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தமிழக பிரச்சனைகளை பற்றி அவர் பேசியுள்ளாரா? நடந்தது எல்லாம் கடிதம் மூலமாகத்தான். இதை பற்றி என்ன சொல்கின்றீர்கள் 0
0
Reply
venugopal s - ,
27 மே,2026 - 18:09 Report Abuse
பரவாயில்லையே, பிரதமரிடமாவது சிரித்த முகத்தை காண்பித்து உள்ளாரே! 0
0
Reply
Rajah - Colombo,இந்தியா
27 மே,2026 - 18:01 Report Abuse
பிரதமர் மோடியை சந்தித்த முதல்வரின், பாஜகவின் கொள்கைகள் குறித்த நிலைப்பாடு மாறலாம். மாற வேண்டும். அதுதான் தமிழகத்திற்கு நல்லது. பதவி ஏற்றதற்குப் பின்னர் முதன் முதலாக ஒரு நல்ல மனிதரை சந்தித்த நீங்கள் அவரின் உதவியோடு தமிழகத்திற்கு நல்லது செய்திட வாழ்த்துக்கள். 0
0
Reply
SUBBU,MADURAI - ,
27 மே,2026 - 17:46 Report Abuse
Modi aged like a fine wine…. 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
27 மே,2026 - 17:38 Report Abuse
10 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடந்தது???10 நிமிடங்களா?? நான் என்னவோ 10 மணிநேரம் என்று நினைத்து விட்டேன்??? இதுக்கு இவ்வளவு டப்பா டப்பா டப்பா வசனமா???இது என்ன சினிமாவா??? 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
27 மே,2026 - 17:22 Report Abuse
வெறும் பத்து நிமிட சந்திப்புதான். விஜய்யின் அரசு அமைப்பிலும், மத்திய அரசுக்கு எதிரான கொள்கைகளிலும் மோடிக்கு மகிழ்ச்சி இல்லை என்று நான் நினைக்கிறேன். தமிழக முதலமைச்சர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகச் செல்கிறார்கள். அவர்களின் சித்தாந்தத்தில் ஏன் இவ்வளவு அகந்தை இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. 0
0
Reply
Shekar - ,
27 மே,2026 - 17:10 Report Abuse
வணக்கம் ஜி, இந்தாங்க கோரிக்கை மனு. தம்பி இதுல என்ன என்ன இருக்கு கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணுவோம். இல்லை தலைமை செயலகத்தில் கொடுத்தாங்க, எனக்கு தெரியல நீங்க பார்த்து எதாவது செய்யுங்க வணக்கம். அஹா... சந்திப்பு வெற்றி, பிரதமர் பயந்திட்டார். 0
0
Reply
Anand - chennai,இந்தியா
27 மே,2026 - 17:00 Report Abuse
குறைந்தபட்சம் யாருக்கு என்னென்ன மந்திரிப்பதவி, அவர்களோட பெயர்களையாவது தெரியுமா இவருக்கு? அல்லது அந்த மந்திரிகளுக்காவது தெரியுமா தாங்கள் ஏற்றது என்ன துறை, அதன் வேலை என்னவென்று? 0
0
Reply
Vasan - ,இந்தியா
27 மே,2026 - 16:45 Report Abuse
உலக அளவில் திரு. நரேந்திர மோடி அவர்கள் நல்ல பெயர் வாங்கியுள்ளது போல், இந்திய அளவில் திரு. ஜோசப் விஜய் அவர்கள் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம். 0
0
சூர்யா - ,
27 மே,2026 - 17:20Report Abuse
மோடிதான் இவருக்கு கொள்கை எதிரியாச்சே? எல்லா அளவிலும் நல்ல பெயர் வாங்குவது எப்படி என்பதற்குதான் கூடவே இருந்து ஆதவ் அர்ஜூனா அனைத்தையும் சொல்லித் தருகிறாரே? அப்புறம் என்ன? 0
0
Anand - chennai,இந்தியா
27 மே,2026 - 17:32Report Abuse
கரூர் சம்பவத்தில் தன்னை மிகப்பெரிய கண்டத்திலிருந்து காப்பாற்றிய எடப்பாடிக்கு பிராயச்சித்தமா அவரோட கட்சியை உடைத்து சிதைத்த நன்றி கெட்ட மனிதர்க்கு எந்த காலத்திலேயும் நல்ல பெயர் கிடைக்காது. கெடுவான் கேடு நினைப்பான். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement