எலக்ட்ரானிக் தொழிற்சாலையில் தீ விபத்து

காஞ்சிபுரம்: வல்லத்தில், தனியார் எலக்ட்ரானிக் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில், நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் சிப்காட் பகுதியில், தனியார் எலக்ட்ரானிக் மின் சாதனப் பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இங்கு நேற்று மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தீ கொழுந்துவிட்டெரிந்தது. தகவலறிந்து ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement