தேத்தாம்பட்டியில் புரவி எடுப்பு விழா

நத்தம்:தேத்தாம்பட்டியில் அய்யனார், சின்னக்கருப்பு, ஆண்டிச்சாமி, கன்னிமார் சுவாமி கோயில்களில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதையொட்டி வத்திபட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமிகள் ,கன்னிமார், குதிரை, மதிலை சிலைகள் ஊர்வலமாக அழைத்து வர ஊர் மந்தையில் கண் திறக்கப்பட்டது.

பின்னர் கோயிலுக்குள் சென்ற சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. மாலையில் வாணவேடிக்கைகள், வர்ணக் குடைகளுடன் அய்யனார் சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக இருப்பிடம் நோக்கி சென்றது. ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement