சாலை விபத்தில் கல்லுாரி மாணவன் பலி
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அருகே, பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், கல்லுாரி மாணவன் உயிரிழந்தார்.
வெங்கல் அடுத்த எர்ணாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுல்ராஜ் மகன் ஹேமந்த், 18. தனியார் கல்லாரியில், பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம், ‘யமஹா’ இருசக்கர வாகனத்தில், கவரைப்பேட்டை மேம்பாலம் அருகே சென்றபோது, அதே திசையில் பின்னால் வந்த, அடையாளம் தெரியாத வாகனம், மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் தருமாறி விழுந்த ஹேமந்த், படுகாயம் அடைந்தார். பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வழியிலேயே ஹேமந்த் உயிரிழந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனு பாகர் ஜோடி 'வெள்ளி': 'உலக' துப்பாக்கி சுடுதலில்
-
இந்தியா-ஆஸ்திரேலியா ஹாக்கி தொடர் சமன்
-
மாராடோனாவின் 'மந்திர' கோல்: உலக கோப்பை கால்பந்து கவுன்ட் டவுண்
-
இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது
-
வைபவ் சூர்யவன்ஷி தேர்வு: இந்திய உத்தேச அணியில்
-
மனைவி கொடுமையால் கருணைக்கொலை செய்ய மாவட்ட கலெக்டரிடம் கணவர் கோரிக்கை; குஜராத்தில் அதிர்ச்சி
Advertisement
Advertisement