வள்ளுவருக்கு குரு பூஜை விழா

கெங்கவல்லி:தம்மம்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில், கடந்த ஏப்., 30ல், திருவள்ளுவர் உள்ளிட்ட, 10 அருளாளர்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. திருவள்ளுவருக்கு வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் குருபூஜை நடத்தப்படும்.


அதன்படி நேற்று, திருவள்ளுவருக்கு குருபூஜை விழா நடந்தது. பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர் கள் வழிபட்டனர்.

Advertisement