எம்.எல்.ஏ.,க்கள் போலி கையெழுத்து கடிதம்: சி.ஐ.டி., பிடியில் மம்தா மருமகன் அபிஷேக்
கொல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேர்வுக்கான கடிதத்தில், திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்தை போலியாக போட்டதாக எழுந்த புகாரில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியின் மருமகனும், எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி விசாரணைக்கு ஆஜராகும்படி, சி.ஐ.டி., அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், முதன்முறையாக ஆட்சியை பா.ஜ., கைப்பற்றியது.
அக்கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்றார். தேர்தல் முடிந்த நிலையில், கடந்த 6ம் தேதி மாலை, திரிணமுல் காங்., தலைவரும், முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியின் வீட்டில், எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது.
அப்போது, திரிணமுல் காங்., லோக்சபா எம்.பி.,யும், மம்தாவின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி, புதிதாக தேர்வான எம்.எல்.ஏ.,க்களிடம் கருத் துக ளை கேட்டார்.
எதிர்க்கட்சி தலைவராக, திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ., சோபன்தேவ் சட்டோபாத்யாயாவை நியமிக்க ஆதரவு அளித்து, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்ட கடிதம் சட்டசபை செய லரிடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், திரிணமுல் காங்., மூத்த தலைவர் நயனா பானர்ஜி, எம்.எல்.ஏ.,வாக பதவியேற்கும் போது கையெழுத்திட்டதற்கும், ஆதரவு கடிதத்தில் உள்ள அவரின் கையெழுத்திற்கும் நிறை ய வித்தியாசங்கள் இருப்பதாக கூறி, ஹரே தெரு போலீஸ் ஸ்டேஷனில், சட்டசபை செயலர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக, திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் நயனா பானர்ஜி, சந்திரனாத் சின்ஹா, குணால் கோ ஷ், பஹருல் இஸ்லாம் ஆகியோரிடம் சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர் . அதில், எதிர்க்கட்சி தலைவர் தேர்வு விவகாரத்தில் கட்சியின் எம்.பி., அபிஷேக் பானர்ஜியின் தலையீடே அதிகம் இருந்தது தெரிய வந்ததால், அவரிடமும் விசாரணை நடத்த சி.ஐ.டி., அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, சம்மன் வழங்குவதற்காக கொல்கட்டாவி ன் ஹரிஷ் முகர்ஜி சாலையில் உள்ள அபிஷேக் பானர்ஜியின் வீட்டிற்கு சி.ஐ.டி., அதிகாரிகள் நேற்று சென்றனர்.
ஆனால், அங்கு அவர் இல்லாததால், காளிகாட் சாலையில் உள்ள மற்றொரு வீட்டிற்கு நேரில் சென்று அதிகாரிகள் சம்மன் வழங்கினர். அதில், நாளை மதியம் 12:00 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, கூறப்பட் டுள்ளது.
இதை பெற்ற அபிஷேக் பானர்ஜி, ''அரசியல் பழிவாங்கும் நோக்கில், எனக்கு எதிராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கூட அமலாக்கத் துறை, சி.பி.ஐ., என, பல விசாரணை முகமைகளின் விசாரணைகளை சந்தித்து இருக்கிறேன். தற்போதைய விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு தரு வேன்,'' என்றார்.
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட திரிணமுல் காங்., தொண்டர் சஞ்சு கர்மாகர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற, அபிஷேக் பானர்ஜி நேற்று சோனார்பூர் தெற்கு பகுதிக்கு சென்றார். அங்கு திரண்ட உள்ளூர் மக்கள் அவரது காரை முற்றுகையிட்டு, ஹிந்தி மற்றும் வங்க மொழியில், 'திருடன்... திருடன்...' என முழக்கமிட்டனர். மேலும், கற்கள், காலணிகள் மற்றும் முட்டை களை வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த பாதுகாவலர்கள், அபிஷேக் பானர்ஜியின் தலையில் தலை கவசத்தை அணிவித்து, அங்கிருந்து அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதனால், சோனார்பூர் தெற்கு பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.
பசுக்களை கடத்தி விற்பது, அப்பாவி மக்களை மிரட்டுவது, தாக்குவது, தனக்கு வோட்டு போடாத அப்பாவி பெண்களை கற்பழிப்பது, ஊருக்கு ஊர் எல்லை பகுதிகளில் அடி ஆள் வைத்து டோல் வரி வசூலிப்பது, வ்யாபாரிகளிடம் லஞ்சம், தனக்கு வோட்டு போடாதவர்களின் வீட்டிற்கு வெள்ளை சேலை அனுப்பி அவர்களின் குடும்ப தலைவன் கொலை செய்யப்படுவர் என்று மிரட்டுவது போன்ற அராஜக செயல்களில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றசாட்டு உள்ளது. இந்த மக்களின் வெறுப்பே நேற்று தர்மம் அடி கொடுத்து, மக்கள் கவனித்து உள்ளனர் என்பது இவரை போன்ற அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் சாட்டையடி.
இருக்கலாம் ....
சட்டப்படி அவர் மீது நடவடிக்கை
எடுக்காமல் தாக்குவது
சட்டம் ஒழுங்கைக் கையில் வைத்துள்ள
முதல்வருக்கு அவப்பெயரைத் தேடித்தரும் ....
மேற்குவங்க மக்கள் திரிணாமூல் கட்சியைப் புரிந்து கொள்ள 15 வருடங்கள் ஆயின .... ஆனால் தமிழர்கள் இன்னமும் [அறுபதாண்டுகளாக] திமுகவைப் புரிந்துகொள்ளவில்லை ....
தேர்தல் தோல்விக்கு பின் தமிழ் நாட்டில் இதுபோன்று நடக்கவில்லை..
தமிழகத்தில், அவர்களுக்கு அரசியல்வாதிகள் என்ன அட்டூழியம் செய்தாலும் உரைக்காது. அவர்களுக்கு வேண்டியதெல்லாம், இலவசம், இலவசம், இலவாசம்தான்.
வென்ற பி டீம் தன்னை இறக்கிய எஜமானன் திமுகவைப் பகைக்குமா >>
கோவைக்காரன் சொன்னது நிதர்சனம் .....
பாஜக ஆதரவு இல்லாமல் மக்கள் தாங்களாகவே இதை செய்திருந்தால், அது மமதாவின் அராஜகத்தின் மீதான கோபத்தைக் காட்டுகிறது. உத்தரப்ரதேசம் குண்டா ராஜ்யத்தில் இருந்து மெதுவாக விடுகிறது.அது போல் மேற்கு வங்கமும் முன்னேறட்டும்.
குற்றசாட்டிற்கு தகுந்த பதில் கூறாமல் ஆகாத பகாத உருட்டுவதில் அரசியல்வாதிகள் பலே
அசுரவெற்றிப் பெற்றக் கட்சி ஊழலில் நிர்வாகச் சீர்கேடுகளில் ஈடுபடும்போது மக்களின் எதிர்ப்பு எவ்வாறு என்பதை மேற்குவங்க எதிர்ப்புக் காட்டியுள்ளது.