இன்று இனிதாக (31.05.2025) சென்னை

ஆன்மிகம் முருகன் கோவில் வைகாசி பிரம்மோத்சவத்தில் விசேஷ பல்லக்கில் முருகர் வீதி உலா, -இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

கல்யாண வரதராஜ பெருமாள் வைகாசி பிரம்மோத்சவத்தில், உற்சவர் பவள வண்ண பெருமாள், சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உலா, காலை 7:00 மணி. இடம்: காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.

கபாலீஸ்வரர் கோவில் திருஞான சம்பந்தர், எட்டாம் நாள் விழாவில், ஓடம் விடல், ஆண் பனையை பெண் பனையாக்கிய ஐதீகம், -மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை,- காலை 6:00 மணி. ராகவன்ஜியின், கந்தர் அலங்காரம்-, மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் காஞ்சி மகா பெரியவரின் 133வது ஜெயந்தி விழா, சுவாமிக்கு கோபூஜை, வேத பாராயணம்,- காலை 7:00 மணி முதல். இடம்: காலேஜ் சாலை, கவுரிவாக்கம்.

பொது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் இலங்கை கிழக்குப் பல்கலை சித்த மருத்துப் பேராசிரியர்களுக்கு, ஓலைச் சுவடி வாசிப்பு மற்றும் பொருள் விளக்கப் பயிற்சி, காலை 10:00 மணி முதல். இடம்: பெரும்பாக்கம்.

தியானம் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி சார்பில் கூட்டு தியானம், காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி வளாகம், அசோக் நகர்.

Advertisement