இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதி: புதிய முப்படை தலைமை தளபதி
புதுடில்லி: இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளோம் என தலைமை தளபதியாக பதவியேற்றுக் கொண்ட பிறகு ராஜா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
முப்படை தலைமை தளபதியாக இருந்த அனில் சவுஹான் பதவிக்காலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து புதிய தலைமைத்தளபதியாக என்எஸ் ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டார். இன்று அவர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். முன்னதாக, அவர் தேசிய போர் நினைவிடத்தில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். இதன் பிறகு, தெற்கு பிளாக்கில் அவருக்கு ராணுவ அணிவகுப்புடன் கூடிய மரியாதை அளிக்கப்பட்டது.




இதனை ஏற்றுக் கொண்ட பிறகு ராஜா சுப்ரமணி கூறியதாவது: முப்படை தலைமை தளபதியாக பதவியேற்றதில் பெருமை அளிக்கிறது. ஆயுதப்படைகள் மீது வைத்த நம்பிக்கைக்காக நாட்டிற்கு கடமைப்பட்டுள்ளோம். ராணுவம், கடற்படை, விமானப்படை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒட்டுமொத்த தேசம் என்ற கருத்தில் ஒருங்கிணைந்து, இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.

தற்சார்பு இந்தியா நமது நாட்டின் பாதுகாப்பின் மையத் தூணாக திகழ்கிறது. நமது ஆயுதப்படைகளில் உற்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை சேர்ப்பதையும், பயன்படுத்துவதையும் விரைவுபடுத்துவோம். ராணுவம், தொழில்துறை, கல்வித்துறை மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு இடையேயான பரந்து ஒத்துழைப்பே, நவீனமாயமாக்கலுக்கான முக்கிய உந்துசக்தியாக இருக்கும். நமது நாட்டு நலன்களை பாதுகாப்பதில், ஆயுதப்படைகள் தொழில்முறைத்திறன் மற்றும் செயல்பாட்டு தீர்க்கமான முடிவெடுக்கும் திறனையும் வெளிப்படுத்தி வருகின்றன. நமது நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம்.

மறைந்த தளபதி பிபின் ராவத் மற்றும் அனில் சவுஹானுக்கு ஆகியோரின் முன்மாதிரியான தலைமைக்கும், அவர்கள் ஆற்றிய பங்களிப்புக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது ராணுவ வீரர்கள், கடற்படையினர் மற்றும் விமானப்படை வீரர்களின் தைரியத்தையும் தொழில்முறைத் திறனையும் அங்கீகரிக்கிறோம். அவர்களின் பயிற்சியும் நலனுமே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். தேசத்திற்காக தாங்களின் வீரம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து நமக்கு உத்வேகம் அளித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். நமது முன்னாள் வீரர்களின் நலனுக்கு உறுதிப்பூண்டுள்ளோம். நமது முப்படைகளும் அர்ப்பணிப்பு, தைரியம், மரியாதை மற்றும்தொழில்முறைத் திறனுடன் தேசத்திற்குத் தொடர்ந்து சேவை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (8)
Patriots to the core - ,
31 மே,2026 - 19:28 Report Abuse
நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, உடல் தகுதியுள்ள அனைத்து ஆண், பெண் இருபாலருக்கும் குறைந்தபட்சம் ஒரு வருட கட்டாய இராணுவ சேவை மிகவும் அவசியமாகும். இல்லையெனில், எதிர்காலத்தில் தங்கள் குடும்பங்களுக்கும் நாட்டிற்கும் எந்தப் பயனும் இல்லாத, பொறுப்பற்ற, எந்த வேலைக்கும் லாயக்கற்ற ஒரு பெரிய கும்பல் நம் நாட்டில் எந்த நோக்கமுமின்றி சுற்றித் திரியும். மிகச் சிறிய நாடுகளில்கூட, ஒருவருக்கு 17 வயது ஆனவுடன் கட்டாய தேசிய இராணுவ சேவைக்கான சட்டம் உள்ளது. இந்த விஷயத்தில் நம் நாடு மிகவும் பின்தங்கியுள்ளது. ஜெய் ஹிந்த். வந்தேமாதரம். 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
31 மே,2026 - 14:37 Report Abuse
சீனா அணு ஆயுத ஏவுகணைத் தளங்களைத் தயார் நிலையில் மாற்றியுள்ளது. எல்லையில் பதற்றம் உள்ளது.சவாலான பணி.வாழ்த்துகள். 0
0
Reply
பிரேம்ஜி - ,
31 மே,2026 - 13:01 Report Abuse
அதற்குத்தானே ராணுவம்.... புதிதாக விளக்கம் சொல்கிறார்... 0
0
guna - ,
31 மே,2026 - 14:01Report Abuse
பிரேம்ஜி போல எல்லோரும் அறிவாளிகள் இல்லையே..என்ன செய்ய 0
0
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
31 மே,2026 - 14:46Report Abuse
ஐயா அறிவாளி ..... இவை முதலில் நமக்கான சாதாரண வார்த்தைகள் அல்ல .... எதிரிகளுக்கு புரியும் வகையில் கொடுக்கப்படும் சங்கேத வார்த்தைகள் ..... 0
0
Reply
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
31 மே,2026 - 12:59 Report Abuse
வாழ்த்துக்கள் ஐயா தங்களின் துவக்க உரையே தங்களின் உறுதியையும் அர்ப்பணிப்பு உணர்வையும் பிரதிபலிக்கின்றன.
முதன் முதலில் இந்த பதவியில் இருந்து ஊட்டியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணித்த திரு. பிபின் ராவத் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.
அவரை தாங்கள் நினைவுபடுத்தி உள்ளீர்.
அவரைப் போன்றதொரு பங்களிப்பை தாங்கள் வழங்குவீர்கள் என்பது தங்களின் உரையிலிருந்தே தெரிகிறது.
பாரத் மாதாகி ஜெய் ... 0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
31 மே,2026 - 12:43 Report Abuse
0
0
Reply
ManiK - ,
31 மே,2026 - 11:40 Report Abuse
Salute you Sir. Jai Hind. Whole Nation with Nationalists are with you sir. You have made your state proud Sir. Your actions will surely impress those non-nationalists as well. 0
0
Reply
மேலும்
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
-
மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை
-
பயிர் கடன் தள்ளுபடியில் குளறுபடி; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
Advertisement
Advertisement