மேற்குவங்கத்தில் தொடரும் பரபரப்பு; மற்றொரு திரிணமுல் காங் எம்பி கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல்
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் அபிஷேக் பானர்ஜியைத் தொடர்ந்து,திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி தாக்கப்பட்டதில், தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து பரபரப்பு நீடிக்கிறது.
மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னர் அரசியல்ரீதியாக நாள்தோறும் ஏதேனும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆளும் பாஜ அரசு மீது திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை நாள்தோறும் தெரிவித்து வருகின்றனர்.
நேற்றைய தினம், மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சோனாப்பூர் பகுதிக்கு தேர்தல் நேரத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பெண்கள் உள்ளிட்ட பலர், அவர் மீது அழுகிய முட்டைகளையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று (மே 31) அபிஷேக் பானர்ஜியைத் தொடர்ந்து,திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி தாக்கப்பட்டதில், தலையில் காயம் ஏற்பட்டது. ஹூக்ளியில் உள்ள சண்டிதாலா போலீஸ் ஸ்டேஷனிற்கு வெளியே திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜ தொண்டர்கள் மோதிக்கொண்டதில், கல்யாண் பானர்ஜி பலத்த காயம் அடைந்தார். அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மம்தா கண்டனம்!
அபிஷேக் பானர்ஜி கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை சந்தித்து நலம் விசாரிக்க மம்தா அங்கு சென்றார்.
இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரியை மம்தா பானர்ஜி கடுமையாக சாடிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. எதற்காக அவர் விமர்சனம் என்றார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
அந்த வீடியோவில் பதிவான காட்சிகளில் மம்தா கூறியதாவது: நாங்கள் உங்களுக்குச் செய்த உதவியை நினைவில் கொள்ளுங்கள். கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார். நீங்கள் தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள். நீங்கள் வெட்கப்பட வேண்டும். உங்கள் ஆணவத்தை எல்லோரும் நினைவில் கொள்வார்கள். நீங்கள் மருத்துவமனையை நடத்துகிறீர்கள், பாஜக ஆட்சியில் உள்ளது. நாளை மத்திய அரசு இல்லையென்றால், நாங்கள் பார்த்துக்கொள்வோம். இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
தலைவியின் தொண்டர் கள்
அராஜகம் செய்தவர்கள் ஆட்சியிலிருந்து இறங்கியவுடன் அடிவாங்குவது சகஜம் தான்.
ஒரு எதிர்க்கட்சி தலைவர் காவல்துறையில் புகாரளிக்க செல்லும்போது காவல்துறை பாதுகாப்பு கொடுக்கவில்லை என்பதுமட்டுமல்லாமல் அரசே காவல்துறையே குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது . இப்படி ஒரு அலங்கோலம் இந்தியாவில் இதுவரை எங்குமே நடந்ததில்லை
இவ்வளவு அடிபட்டும் இந்த மமதைக்கு ஆணவம் அடங்கவில்லையே இன்னும் இவருக்கு என்னதான் வேண்டும் எப்போதுதான் அடங்கி மவுனம் சாதிப்பார் ராமகிருஷ்ணா மேடம் அங்கே உள்ளது அங்கு சென்று தீட்சை பெற்று சில காலம் மவுன விரதம் அனுஷ்டித்தார் என்றால் இவருக்கு இப்பிறவியில் சற்றாவது நிம்மதிக்கிடைக்கும் மக்களும் நிம்மதியாக வாழ முடியும்
இவர் மேல் அப்படி ஒன்றும் அடி விழவில்லை, 90% நாடகமாடுகிறார்.
மம்தாவுக்கு முட்டு கொடுக்க வந்துட்டே வங்கக்கத்துக்கு போய் முட்டுக்கொடு. ஏன் என்று புரியும்
15 ஆண்டுகள் வன்முறை. 1000 கணக்கான பெண்கள் கற்பழிப்பு, முக்கிய சாலைகளில் தடுப்பு அமைத்து வாகனங்களை மறித்து லஞ்சம், ஏழை மக்களிடம் மர்ம நபர்கள் அவர்கள் பண்டிகைகளுக்கு பணம் வசூல், மனமகள் மன்றம் என்ற பெயரில் விபச்சாரம், ஏழைகளின் பசுக்களை திருடி பங்களாதேஷுக்கு கடத்தல், தெருவில் நமாஸ் என்ற பெயரில் அராஜகம், அரசு பொது நிலங்களை ஆக்ரமித்து, பங்களாதேஷிகள் குடிசை அமைப்பது, கல் கடத்தல், மணல் கடத்தல், அரசு வேலைவாய்ப்புகள் எல்லாம் ஏலம் மூலம் விற்பனை, ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்ஸுகள் கற்பழிப்பு இது போல சில நூறு அநியாயங்கள்.
மக்களின் வெறுப்பு தர்ம அடி மூலம் வெளி வருகிறது. இந்த நூற்றண்டின் மிக பெரிய தேச விரோதி, குடும்ப மற்றும் MLA களின் அட்டூழியம் மீது மக்கள் எடுக்கும் நடவடிக்கை இது.
ஹிந்துக்கள் விழித்து கொண்டனர்
தற்போனது தினமலரில் தமிழ் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் எழுதி மொழிபெயர்ப்பிற்கு சென்றால் மோசமான மொழி பெயர்ப்பாக வருகிறது. சில சமயம் தப்பர்த்தமாகவும் அபத்தமாகவும் மொழிபெயர்ப்பு வருகிறது. முன்பெல்லாம் இப்படியில்லை. இங்கும் தீ மு கா வின் IT விங்கின் வேலையோ என்று என்ன தொன்று கிறது. நின்னைப்பும் வருகிறது.