13 லட்சம் ஏக்கர் கோவில் இனாம் நிலங்களை மீட்பதில் அரசு கவனம்; அமைச்சர் ரமேஷ் உறுதி

39


சென்னை: தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 13 லட்சம் ஏக்கர் கோவில் இனாம் நிலங்களை மீட்க அரசு உறுதிபூண்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேட்டியில் கூறியதாவது; பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் இனாம் நிலங்கள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம், குடியிருப்பு மற்றும் வணிகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கோவில் நிலங்களை அடையாளம் காணும் பணி பல்லாண்டுகளுக்கு முன் தொடங்கியது.
எனினும், கோவில் இனாம் நிலங்கள் தொடர்பாக முழு கவனம் செலுத்தப்படவில்லை. இந்த நிலங்கள் அனைத்தும் கோவில்களுக்கு முழு உரிமையானவை.

மாவட்ட வாரியாக ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் இனாம் நிலங்கள் குறித்தும், அதனை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் நிலை குறித்து அறிக்கை தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
அது மட்டுமின்றி, ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை (இனாம் நிலங்கள் வேறு வகை) மீட்பது குறித்தும் நடவடிக்கை அறிக்கை கேட்டுள்ளேன்.

கோவில்களுக்கு வர வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்கவும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போதைய நிலவரப்படி 1500 கோடி ரூபாய் வாடகை கோவில்களுக்கு வராமல் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.



@block_B@

அதென்ன இனாம் நிலம்!



இனாம் நிலம் என்பவை, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாக, நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களால் கோவில்களை பராமரிக்கவும், அவற்றின் சேவைகளை தொடர்ந்து செய்வதற்கும் தானமாக வழங்கப்பட்டவைblock_B

Advertisement