மலேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை
மலேசியா: மலேசியாவில் இன்று முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த முயற்சியை மலேசியா அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி, சமூக வலைதளங்களைப் பயன்படுத்த கட்டாயமாக வயது சரிபார்ப்பு முறைகளைச் செயல்படுத்த வேண்டும் மற்றும் 16 வயதிற்குட்பட்டோர் கணக்குத் தொடங்குவதைத் தடுக்க வேண்டும் ஆகிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.அதாவது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற 8 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட தளங்களுக்கு இந்த விதி பொருந்தும். விதிகளைப் பின்பற்றத் தவறும் நிறுவனங்களுக்கு ரூ.24 கோடி வரையில் அபராதம் விதிக்கப்படலாம்.
ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளும் ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர், சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.
இது குறித்து மெட்டா நிறுவனத்தின் கொள்கை இயக்குனர் கிளாரா கோ கூறுகையிர்ல, "இத்தகைய முழுமையான தடை பதின்ம வயதினரை முறைப்படுத்தப்படாத இணையப் பக்கங்களுக்குத் தள்ளிவிடும்," என்று எச்சரித்துள்ளார்.
உண்மையிலேயே இது பாராட்டத்தக்க கூடிய விஷயம் காரணம் பதினாறு வயது ஆகாமலேயே இன்டர்நெட்டில் மற்றும் சமூக ஊடகங்களில் சிறுவர்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபடுகிறது. இதற்கு காரணம் சமூக ஊடகங்களை அது தடை செய்வதும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வருவதும் நல்லது அதே போல் இந்தத் தடையை ஏற்கனவே சில நாடுகள் அமல்படுத்தி இருக்கின்றன
அந்த வரிசையில் இப்போது மலேசியாவும் இணைந்துவிட்டது எப்போது இந்தியா இணையப் போகிறது..??
மலேசியாவில் மட்டுமில்லை, எந்த நாட்டிலும் இந்த மாதிரி சட்டத்தினால் பெரிய பலன்கள் ஏற்படப்போவது இல்லை. தாய் தந்தையர், அண்ணன், அக்கா, மாமன், மச்சான் என்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் போன்களை சிறுவர், சிறுமியர் பயன்படுத்த முடியும் சிம் கார்டு பெரியவர்களின் பெயரில் வாங்கி ஆக்டிவேட் செய்து பின்னர் சிறுவர்கள் குழந்தைகள் பயன்படுத்துவார்கள். சோசியல் மீடியா-விழும் பெரியவர்கள் கணக்கை துவங்கினால் போதுமே, அவற்றை சிறியவர்கள் பயன்படுத்த முடியும். தேவை பெற்றோரின் சுய கட்டுப்பாடு பெரியவர்கள் சோசியல் மீடியாவில் நேரத்தை வீணடிக்காமல் இருந்தால், குழந்தைகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.
கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. ஒரு நல்ல நோக்கத்திற்கான நல்ல சட்டம். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஏனெனில், கைபேசிகளால் அதைப் பயன்படுத்தும் நபரின் வயதைக் கண்டறிய முடியாது. மேலும், தொழில்நுட்பம் நிறைந்த இந்த உலகில், குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் கைபேசிகளைப் பிள்ளைகள் பயன்படுத்துவதைத் தடுப்பதும் சாத்தியமில்லை. குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு, இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றம் ஒரு வரமா அல்லது சாபமா என்று தெரியவில்லை. குழப்பமாக இருக்கிறது.
குழந்தைகள் பெற்றோரின் மொபைல் மற்றும் லேப்டாப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் விளையாடுகிறார்கள். இதை கட்டுப்படுத்த எப்படி செயல்படுத்துவது?
தெய்வமே அத இந்தியா ல 18 வயசு என்று உறுதி செய்து ஆதார் கார்டு உடன் இணைத்து உடனே செயப்படுத்துங்க ..படிக்கும் பிள்ளைகள் வாழ்க்கை சீர்கேடாக போகின்றது .. மத்திய அரசு உடனடியாக இன்ஸ்டாகிராம் , face book எல்லாவற்றுக்கும் தடை போட வேண்டும்மேலும்
-
அப்பாடா!ஒருவழியாக நடந்தது மாநில ஜி.எஸ்.டி. கூட்டம்: எம்.எஸ்.எம்.இ. நிறுவனத்தினர் சந்தோஷம்
-
கர்நாடக முதல்வராக சிவகுமார் பதவியேற்பு துணை முதல்வராக பரமேஸ்வர் நியமனம்
-
மஹா.,வில் முடிந்தது தமிழகத்தில் முடியாதா?
-
கழிப்பிடத்துக்காக தினமும் ஒரு கி.மீ. நடை
-
இந்தியா வந்தது ரஷ்ய எஸ் - 400 வான் கவசம்
-
ஐ.நா., பொது சபை தலைவராக வங்கதேச அமைச்சர் தேர்வு