கர்நாடக முதல்வராக சிவகுமார் பதவியேற்பு துணை முதல்வராக பரமேஸ்வர் நியமனம்
பெங்களூரு: கர்நாடக முதல்வராக சிவகுமார் நேற்று பதவியேற்றார். துணை முதல்வராக பரமேஸ்வரும், 12 அமைச்சர்களும் பொறுப்பேற்று கொண்டனர்.
கர்நாடக காங்., அரசில் முதல்வராக இருந்த சித்தராமையாவின் ராஜினாமாவை தொடர்ந்து, புதிய முதல்வராக, மாநில காங்., தலைவர் சிவகுமார் தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவியேற்பு விழா, பெங்களூரு லோக் பவனில் நேற்று மாலை 4:00 மணிக்கு நடந்தது.
கவர்னர் தாவர்சந்த் கெலாட், சிவகுமாருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார். இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை கையில் பிடித்தபடி, கர்நாடகாவின், 25வது முதல்வராக சிவகுமார் பதவியேற்றுக் கொண்டார்.
தலைமை நீதிபதி தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வர், துணை முதல்வராக பதவியேற்று கொண்டார். அடுத்து, முனியப்பா, ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், ராமலிங்கரெட்டி, சதீஷ் ஜார்கிஹோளி, கிருஷ்ண பைரே கவுடா, பிரியங்க் கார்கே, காதர், ஈஸ்வர் கன்ட்ரே, யதீந்திரா, பைரதி சுரேஷ், சரண பிரகாஷ் பாட்டீல் ஆகிய, 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் ஹிமாச்சல பிரதேசம் - சுக்விந்தர் சிங் சுகு, தெலுங்கானா - ரேவந்த் ரெட்டி, கேரளா - சதீசன், காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர்.
மோடி வாழ்த்து பிரதமர் மோடியின், 'எக்ஸ்' பதிவில், 'கர்நாடக முதல்வராக பதவியேற்ற சிவகுமாருக்கு வாழ்த்துகள்; அவரது பதவி காலம் சிறப்பாக அமையட்டும். மக்கள் நலனுக்காக கர்நாடக அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும்' என தெரிவித்துள்ளார்.
முதல்வராக பதவியேற்கும் முன், நேற்று காலை சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர்களான முன்னாள் பிரதமர் தேவ கவுடா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோரின் வீடுகளுக்கு சென்று, அவர்களிடம் ஆசி பெற்றார்.
கர்நாடகாவில் முதல்வர் உட்பட, 34 அமைச்சர்கள் இடம்பெறலாம். இன்னும், 20 இடங்கள் காலியாக உள்ளன. சில நாட்களில், 20 இடங்க ளும் நிரப்பப்பட உள்ளன.
தமிழருக்கு பதவி முதல்வர் சிவகுமாரின் செயலராக மதுரையைச் சேர்ந்த தமிழரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சிவகுமார், துணை முதல்வராக பதவி வகித்த போது, அவரது செயலராக, ராஜேந்திர சோழன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எதிர் கட்சி தலைவர்கள் தேவ கவுடா முன்னாள் முதல்வர் எடியூறப்பா இவர்களின் இல்லங்களுக்கு சென்று வாழ்த்து பெறுவது இப்போது புதுமையாகவே உள்ளது தமிழ் நாட்டிலும் இதே போன்று முதல்வர் விஜய் செய்தார் நல்ல பழக்கம் எதிரிகளாக எதிர்கட்சி தலைவர்களையும் அந்த கட்சியையும் பார்க்காமல் நன்றி மனப்பான்மையுடன் அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று தங்களது ஆட்சிக்கு தீங்கு ஏதும் செய்யயாதீர்கள் என்று சொல்லாமல் சொல்லி அவர்களின் ஆசிர்வாதத்தை பெரும் பழக்கம் புதிது வரவேற்கத்ததுமேலும்
-
மைதானத்தை துாய்மைப்படுத்த வைத்த தீ மீன்வள கல்லுாரி முழுதும் பரவி பாதிப்பு
-
பராமரிப்பில்லாத பஸ் நிலையம் பேரம்பாக்கம் மக்கள் சிரமம்
-
மது விற்பனையில் என்ன மாற்றம் செய்து விட்டனர்? செந்தில் பாலாஜி கேள்வி
-
அமைச்சருக்கு தெரியாமல் நடக்கிறதா பதவி உயர்வு கவுன்சிலிங்? புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
-
தேரில் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் உலா வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்
-
அட்டப்பாளையம் சமூக காட்டில் சவுடு மண்... கபளீகரம்:இரவு நேரங்களில் கொள்ளையர்கள் அட்டகாசம்