மஹா.,வில் முடிந்தது தமிழகத்தில் முடியாதா?

பல்லடம்: 'மஹாராஷ்டிரா அரசால் செயல்படுத்த முடிந்த பயிர் கடன் தள்ளுபடியை, தமிழக அரசால் நிறைவேற்ற முடியாதது ஏன்?' என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

பல்லடத்தில், அதன் செயல் தலைவர் வெற்றி கூறியதாவது:

மஹாராஷ்டிரா அரசு, விவசாயிகளுக்கு, 2 லட்சம் ரூபாய் வரை, பயிர் கடன் தள்ளுபடி அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி, அரசு முழுமையான பயிர் கடன் தள்ளுபடி செய்யும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த விவசாயிகளுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. விவசாயிகளை கடன் சுமையிலிருந்து மீட்க, தேர்தல் வாக்குறுதிப்படி, பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும்.

மஹா., அரசால், பயிர் கடன் தள்ளுபடியை செயல்படுத்த முடியும் போது, தமிழக அரசால் ஏன் முடியாது? உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடன் சுமையில் சிக்கி தவிக்கின்ற நிலை தொடரக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement