பிரசவம் பார்த்த ‘108’ ஊழியர்கள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி அருண்குமாரின் மனைவி நீனா, 34. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் காத்திருக்கும், ‘108’ ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ நுட்புநர் சரவணக்குமார், ஓட்டுநர் சதிஸ்குமார் உள்ளிட்ட ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர். அதில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பின் உரிய முதல் உதவிகளுடன், தாயும், சேயும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement