சட்டம், ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு தொடர்பான வாராந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில், கடந்த மாத கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிகழ்வுகள், அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ளவை குறித்து கேட்டறியப்பட்டது.

தொடர்ந்து, வரும் காலங்களிலும் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பிரச்னை ஏற்படும் சூழல் இருந்தால் அதை உடனடியாக தெரிவிப்பதுடன், அதன் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் எஸ்.பி., ஷானாஸ், டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி மற்றும் காவல்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement