பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கருட சேவை உற்சவம் நடந்தது.

கள்ளக்குறிச்சி புண்டரிகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு கடந்த 31ம் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது.

மாலை 5:00 மணிக்கு மண்டகப்படி மகா தீபாராதணை நடந்தது. இரவு 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேசிக பட்டர் வைபவத்தினை செய்து வைத்தார்.

Advertisement