ஜே.சி.பி., உரிமையாளர்கள் சங்க கூட்டம்

சின்னசேலம்: சின்னசேலத்தில், வட்டார ஜே.சி.பி., வாகன உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தாலுகா அலுவலகம் அருகே நடந்த கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ், பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சின்னசேலம் வட்டார ஜே.சி.பி., வாகன உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வால் ஒரு மணி நேரத்திற்கான வாடகை 1,200 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக ஆக நிர்ணியத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குமார் நன்றி கூறினார்.

Advertisement