யானை தாக்கி ஒருவர் காயம்

பந்தலுார்: பந்தலுார் அருகே பிதர்காடு ஓடோடம்வயல் பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன்,52. எலக்ட்ரானிக் பணி செய்து வரும் இவர், நேற்று முன்தினம் இரவு கைவட்டா பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்று விட்டு,திரும்பி நடந்து வந்துள்ளார்.

இரவு, 8:00- மணிக்கு சாலையை கடக்க முயன்ற யானை, அந்த வழியாக நடந்து வந்த சுகுமாரனை தாக்கி உள்ளது. அப்போது, அவரது இடது கால் மற்றும் தொடை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதே இடத்தில் விழுந்துள்ளார்.

தகவல் அறிந்த வனவர் சுதீர்குமார் மற்றும் வனக்குழுவினர் அப்பகுதிக்கு சென்று, காயமடைந்த சுகுமாரனை மீட்டு, மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு தனியார் மருத்துவமனை அனுமதித்துள்ளனர். வனத்துறை சார்பில் அதற்கான செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement