மது விற்பனையில் என்ன மாற்றம் செய்து விட்டனர்? செந்தில் பாலாஜி கேள்வி
கோவை: ''மது விற்பனையில் அதிகாரிகளும், அமைச்சர்களும் என்ன மாற்றம் செய்து விட்டனர்,'' என, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற இவர், நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு, மக்கள் நலனை கவனிக்காமல், தி.மு.க.,வையே குற்றம் சுமத்தி வருகிறது. அரசு கடமையை செய்யத்தவறும் போது, சுட்டிக்காட்டுவது எதிர்கட்சியின் கடமை. நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். கல்வி, மருத்துவத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தொழில்துறையில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. இதை தாண்டி த.வெ.க., என்ன மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்பதை பார்ப்போம்.
சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தீர்க்க, ஆறு மாதம் பொறுத்திருக்க வேண்டுமா. மின்வெட்டுக்கு தீர்வு காண வேண்டும். வெறும் வசனம் பேசுவதற்கு பதிலாக துறைசார்ந்த பணிகளை கவனிக்கலாம்.
கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் எவ்வளவு மோசமாக பாட்டு பாடி கேவலப்படுத்தினார். தற்போது, மது விற்பனையில் அதிகாரிகளும், அமைச்சர்களும் என்ன மாற்றத்தை செய்துவிட்டனர்? இது ரீல்ஸ் ஆட்சி. இனியும் 'ரீல்ஸ்' மோகத்தில் தான், அரசும், அமைச்சர்களும் உள்ளனர். மக்களுக்கான ஆட்சி இனியும் துவங்கவில்லை. துவங்குவர் என்ற நம்பிக்கை இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
குறை சொல்லி அனுபவம் இல்லாத கட்சியும் அதன் தலைவரும் ஊழல் பற்றியும் அதிகார துஷ்ப்ரயோகம் பற்றி பேசி ஆட்சியை பிடித்தவர்கள் அசாம் Mr.Prafulla Kumar Mohanta , டெல்லி அரவிந்த் கெஜ்ரிவால் முதல் தடவை திறமை இல்லாமல் ஆட்சி கவிழ்ந்தது அனால் அசாம் தலைவர் பாடுபட்டு அரசியலும் ஆளுமையும் வெவ்வேறு என்று பிரித்து காட்டியவர் இங்கே Aadav Arjuna தான் எல்லாமே. அவர்தான் நிழல் முதல்வர் நிழல் துணை முதல்வர் புஸ்சய் ஆனந்த் கட்டுப்பாடு மரியா வில்சன் . இதில் நிர்வாகத்திறமை உள்ளவர்கள் என்று பார்த்தால் செங்கோட்டையன் ஒன்றுதான்
10 ரூபாயில் இருந்து திடீரென பூஜ்யம் ஆக்க முடியாது எனில், படிப்படியாக, மாதம் 1 ரூபாய் வீதம் குறைக்கலாம். ஜூன் மாதம் 9 ருபாய், ஜூலை மாதம் 8 ருபாய், ஆகஸ்ட் மாதம் 7 ருபாய் என குறைத்தால், அடுத்த ஏப்ரல் 1ம் தேதி பூஜ்யம் ஆகி விடும். மது அருந்துவதை, மதுப்பிரியர்கள் மற்றும் மது அடிமைகள் "மது அடிக்ட்" சட்டென நிறுத்த முடியாது என்பார்கள், கைகள் நடுங்கும், உதறும் என்பார்கள். படிப்படியாக தான் குறைக்க முடியும் என்பார்கள். அது போல் தான் 10 ரூபாய் சமாச்சாரமும். தளபதி விஜய் அரசிற்கு சிறிது அவகாசம் கொடுக்கலாமே, இன்னும் 5 வருடங்கள் இருக்கிறது, முழுவதும் சாதிக்க.
மது விற்பனையில் நீ செய்த ஏமாற்றுத்தனம் வழக்கை மறுபடியும் ஆரம்பித்து உன்னை உள்ள தள்ள போகிறார்கள். அதுதான் மாற்றம் 10 ரூ பாலாஜி.
பாலாஜி , திருத்தங்கள், சிவகாசி ஊரில் ஸ்கூல் / கோவில் அருகே இருந்த குடிகார கடைகள் மூடப்பட்டுள்ளது இன்றைவரை என்பது சாதனைதான்.
இனிமேத்தாண்டி இருக்கு உங்களுக்கு....இளக்காரமா பேசுறீங்க? நாட்டையும் மக்களையும் ஊழல்வாதிகளாக மாற்றி விட்டீர்கள். இதையெல்லாம் சரி செய்வது பெரிய சாதனை. கூடிய விரைவில் திகாரில் களி தின்ன ரெடியாகிக்கொள்ளுங்கள்.
துஷ்ட சக்தி ஆதாரம் எட்டு கரூர் சம்பவம் பற்றி இப்போது யாரையும் பேசுவது இல்லை ,
தீயமூக அமைச்சரகள் மீது நடவடிக்கை ஏன் எடுக்க கூடாது என்று உயர்நீதி மன்றம் கேள்வி கேட்டும்
அமலாக்கத்துறைக்கு இந்த ரீல்ஸ் அரசாங்கம் இன்னும் ஏன் அனுமதி கொடுக்க வில்லை
துஷ்ட சக்தி தீய சக்தி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் ....
தவக வலையில் செ பாலாஜி தானாகவே வீழ்ந்து விட்டார். இனிமேல் தான் துறை ஊழல்கள் தீவீரமாக ஆராயப்படும்.
படுதோல்வி அடைந்த திமுக 10 ரூபாய் பாலாஜியை விட்டு வீண் வம்புக்கு இழுக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள் பார்ப்போம்
பத்து ரூபாய் பாட்டிலுக்கு என்று பாடி ஆட்சியை பிடித்த விஜய்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும். அந்த பத்து ரூபாய் இப்போது யாருக்கு செல்கின்றது? மதுப்பிரியர்களின் பணம் அல்லவா? அவர்களின் தயவால்தான் ஆட்சிகள் நடந்தன இன்னமும் அது தொடர்கின்றது. அப்படிப்பட்ட மதுபிரியர்களுக்கு அந்த பத்து ரூபாயை ஏன் வசூலிக்கனும்ம்னு கேட்கின்றார்கள். செந்தில் பாலாஜியெல்லாம் கெடுக்கும் நிலையில் புதிய ஆட்சி தலைகுனிவை செந்திக்கின்றது. எழுதி கொடுப்பதை வசனம் போல மட்டுமே பேசினால் போதாது. அரசுப்பணியில் கவனம் செலுத்தவேண்டும். அவ்வப்போது பேட்டி கொடுத்து மக்களுக்கு அரசின் திட்டங்களை அறியவைக்க செய்யவேண்டும். விஜய்யை சூழ்ந்துள்ள கூட்டமானது ஏதோ திட்டத்தோடுதான் செய்லபடுகின்றனர். உஷாராக இருக்கவேண்டியது அவசியமும் கூட
இப்போது கூட TASMAC-இல் வசூல் நடைபெற்று கொண்டிருக்கிறது. விஜய் கொடுத்த உத்தரவை யாரும் மதிக்கவில்லை போலத் தெரிகிறது. இன்னும் கூட ஒவ்வொரு பாட்டிலுக்கும் 20 ரூபாய் வசூல் நடைபெறுகிறது. அனைவருக்கும் இது அறிந்ததே, திரு. செந்தில் பாலாஜி கூறியதுபோலவே நிலைமை உள்ளது. அரசு விஜயின் கட்டுப்பாட்டில் இருகிறது, ஆனால் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய அவர் நேரம் கொஞ்சம் வேண்டும் என்று கேட்பது அபத்தமாக உள்ளது. எப்படியோ, இன்னும் கொஞ்சம் காத்திருந்து, புதிய அரசு, குறிப்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது புதிய அணுகுமுறையால் பொதுமக்களை எப்படி பாதுகாக்கப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.