ராஜ்யசபா தேர்தல்: காங்., சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டி
புதுடில்லி: தவெக ஒதுக்கிய ராஜ்யசபா சீட்டில், காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிட உள்ளார். இதனை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் இருந்து மல்லிகார்ஜூனா கார்கே, பவன் கெரா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியான சிவி சண்முகம், சட்டசபை தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவிக்கு வரும் 18 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் தவெக எளிதாக வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், அந்த ராஜ்யசீட்டை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. இதனையடுத்து அந்த சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதல்வர் விஜய் அறிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் மற்ற மாநிலங்களில் இருந்து நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதன்படி
கர்நாடகாவில் இருந்து மல்லிகார்ஜூனா கார்கே, பவன் கெரா, மன்சூர் அலிகான்,
மபியில் இருந்து மீனாட்சி நடராஜன்
ராஜஸ்தானில் இருந்து நீரஜ் தங்கி
ஜார்க்கண்டில் இருந்து பிரணவ் ஜா ஆகியோர் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அ.தி.மு.க வசம் இருந்த ராஜ்யசபா சீட்டை காங்கிரசுக்கு வாரி வழங்கிய கடையேழு வள்ளல்களைக் கடந்த எட்டாவது வள்ளல் சி.வி.சண்முகத்தை இன்னுமா அ.தி.மு.கவில் வைத்துக் கொண்டு உள்ளீர்கள்? இன்னுமா அவர் அ.தி.மு.க காரர் என அ.தி.மு.க தலைமை நம்புகிறது?
நாங்கள் ஹிந்தியைத்தான் எதிர்ப்போம். ஹிந்திக் காரர்களை எப்போதும் எதிர்க்க மாட்டோம். ஹி,ஹி.....
For 5 MLAs Congress got 2 minister and Rajya Sabha post.Had Congress won 25 seats there would be Cong CM with 10 minister.
கார்கேவுக்கு எதற்காக மறுபடியும பதவி.
காங்கிரஸ்க்கு அதிமுக உதவி.
No use.They don't have any value and not going to do anything beneficial to the state except chamcha to RG
அரசியல் சாணக்யா பிரவீன் வாழ்க
நல்லதா போச்சு தமிழகத்துக்கு சம்பந்தம் இல்லாத விஷ்ணு ரெட்டி , ரொட்டி, நாயுடு , kouyudunu எவனுக்கோ தூக்கி கொடுக்காமல் மண்ணின் மைந்தர்களுக்கு கொடுத்தது நandru.
கடைசியில் இந்த மதசார்பற்ற கூட்டணி ஒரு பிராமணருக்கே வாய்ப்பு கொடுத்துள்ளது.
பப்புவின் ஒத்த ஓட்டு முத்தையா கட்சியின் சுத்தரவர்த்தி அவ்வளவு எளிதில் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற மூடியாது சுடலையும் எட்டாப்பாடியும் கூட்டாக சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் 117 பேர் ஓட்டுடன் எளிதாக வென்று விடும் 112 பேருடன் ஒத்த ஓட்டு முத்தையா கட்சி ஓகையா