கனிமவள கடத்தலை தடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை: 'கனிமவள வருவாயை பெருக்க, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; அவற்றை சட்ட விரோதமாக கடத்துவதை தடுக்க வேண்டும்' என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கனிமவள கடத்தலை தடுப்பது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில், முதல்வர் விஜய், ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், பிரபு, மரிய வில்சன், தலைமைச் செயலர் சாய்குமார், நிதித்துறை செயலர் சித்திக், நீர்வளத்துறை செயலர் சத்யபிரதசாஹு, இயற்கை வளங்கள் துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண் இயக்குனர் சரவணவேல்ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், ''கனிமவளங்களை நீடித்த வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில், முறையாக எடுத்து பயன்படுத்த வேண்டும்.
கனிமவள வருவாயை மேம்படுத்த, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சட்ட விரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்திற்கு ரெட்டியை கூப்பிடலையா
தமிழக அரசுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் நமது கனிம வளங்கள் முதலில் நம் மாநிலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்களுக்கு கணக்கு வழக்கு இல்லாமல் கடத்தப்படுகிறது இதை முதலில் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் அடுத்ததாக ஒவ்வொரு கல்வாரியிலும் இருந்து கல் எடுக்கும் போது முறையான அனுமதி இருந்தால் தான் இந்த குவாரியை இயக்க விட வேண்டும் மேலும் மிக அதிக அளவில் கனிமங்களை வெட்டி எடுத்துவிட்டு குறைந்த அளவை அரசு கணக்கு காண்பிக்கப்படுகிறது ஆகையால் இந்த முழு நடைமுறையையும் மாற்ற வேண்டும் அதாவது என்னவென்றால் கல் குவாரியில் இருந்து கல்வெட்டி எடுப்பதற்கு ஒரு அனுமதி கல் வெட்டி எடுத்த பிறகு ஒவ்வொரு யூனிட் எம்சன் மணல் குவாரியில் இருந்து வெளிவரும் போது கட்டாயமாக இ-பேப்பர் அதாவது ஆன்லைன் பில் ஒவ்வொரு யூனிட்டுக்கும் அரசுக்கு 500 ரூபாய் செலுத்துவதிலும் பொதுமக்கள் ஒரு யூனிட் 1500 ரூபாய் கிடைக்கும் வகையிலும் செய்தால் அரசுக்கு ஆணுக்கு 60 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரம் கோடி வரை வருமானம் வரும் அதே போல் பொதுமக்கள் மிகவும் நியாயமான விலையில் எம் சென்ட் கிடைக்கும் தற்பொழுது ஒரு ஒரு யூனிட் எம்சாண்ட் பொதுமக்களுக்கு 4500 ரூபாய் விலை வைத்து விற்கப்படுகிறது ஆனால் அரசுக்கு ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய்க்கு குறைவாகவே போகிறது இதில் பொது மக்களுக்கும் பயனில்லை அரசுக்கும் பயனில்லை அரசு முறையாக ஆன்லைனில் ஒழுங்குபடுத்தினால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் பொது மக்களுக்கு நியாயமான விலையில் எம் சாண்ட் கிடைக்கும் சாதாரண மனிதனாகிய எனக்கு இது தெரியும் போது அரசு அதிகாரிகளுக்கு இது எப்படி தெரியாமல் போகும் எம்சன் குவாரி வீடு மட்டும் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தனியா இருக்கு செல்கிறது பொதுமக்களுக்கும் பயனில்லை அரசுக்கும் பயனில்லை அரசு இதில் உயர்ந்த கவனம் செலுத்தாதே நம் தமிழ்நாட்டின் வருமானம் என்பது மிகையாக இருக்கும் மற்ற நலத்திட்டங்களையும் எளிதாக செயல்படுத்த முடியும் மிகக் கடுமையான ஆன்லைன் அனுமதி சீட்டு முறை வந்தால் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த முடியும் அரசுக்கு வருமானம் பல ஆயிரம் கோடி முடியாதது என்று எதுவும் கிடையாது அரசு பரிசீலிக்குமா?
சொல்லிட்டாருப்பா .... அப்படியே செய்யுங்கள் ....
அனைத்தையும் வெட்டிக்கலக கும்பலுக்கு தாரை வார்க்கும் முயற்சி